குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 1

இதற்கு முந்தைய குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள் குடியுரிமையின் வேறு பல சிக்கலான பரிணாமங்களை அணுகின. ஆயினும், நாட்டில் இதுவரை முழுமையாக குடிமக்களாக அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் அகதிகளை என்ன செய்வது என்பதில் தெளிவான திசை காட்டப்படவில்லை. அந்தக் குறைபாட்டைப் போக்க நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சியால் உருவானதே குடியுரிமைத் திருத்தச் சட்டம்-2019.