பிராமணன் யார்? ஓர் உபநிஷத்தின் கருத்து

போலீஸ் வேவுத்தொழில் செய்பவன் பிராமணன் ஆக மாட்டான். குமாஸ்தா வேலை செய்பவன் க்ஷத்திரியன் ஆக மாட்டான். சோம்பேறியாக முன்னோர் வைத்துவிட்டுப்போன பொருளை யழித்துத் தின்பவன் வைசியன் ஆக மாட்டான். கைத்தொழில்களை யெல்லாம் இறக்கக் கொடுத்துவிட்டுச் சோற்றுக்குக் கஷ்டமடைவோர் சூத்திரர் ஆக மாட்டார்கள். இவர்களெல்லாம் மேம்பாடுடைய ஆரிய வர்ணங்கள் நான்கிற்கும் புறம்பாகிய நீசக் கூட்டத்தார்.