"சீமையில் சில குரங்குகளை சில ஸர்க்கஸ் கம்பெனியார் கால் சட்டை, கோட், தொப்பி, கண்ணாடி, பூட்ஸ் வகையறா மாட்டி, சாராயம் கொடுத்து, ஸிகரெட்டுப் பிடிக்கச் சொல்லி, உடுப்பு மாட்டி, உடுப்புக் கழற்றி, மேஜையிற் தீனி தின்று, அமளிப் படுத்தும்படி கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதைக் காட்டி காசு வாங்கி மனிதன் பிழைத்திருக்கிறான். ..."