தமிழ் இலக்கியத்தில் செங்கோல் -17

நமது தமிழ் மொழியின் வனப்பை மெருகேற்றிய இனிய பாடல்களை சைவர்களின் பன்னிரு திருமுறையும், வைணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தமும் அளித்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் இறைவனைப் போற்றுவதுடன், அக்கால மக்களின் வாழ்க்கை நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கொண்டுள்ளன. இவற்றில் பன்னிரு திருமுறைகள் குறித்தும், அதில் செங்கோல், நல்லாட்சி தொடர்பான செய்திகள் பயிலும் சில பாடல்களையும் முதலில் காண்போம்.  

நினைவு முடிச்சு

போருக்குச் செல்லும் வீரனின் கரங்களில் கட்டப்படும் காப்புக்கயிறு போல, நம் வாழ்விலும் சில நினைவு முடிச்சுகள் தேவைப்படுகின்றன. இதோ நமது வாழ்வை வளப்படுத்தும் இனிய வழிகாட்டுதல் கட்டுரை. இதனை வழங்கி இருப்பவர், பேரா. இளங்கோ ராமானுஜம் அவர்கள்...