தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 8

பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்து, ஆற்றுப்படை நூல்கள். அவை: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை ஆகியவை. இந்த ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படையிலும், மலைபடுகடாமிலும் மன்னரின் / நாட்டின் சிறப்புகள் குறித்த செய்திகள் இருந்தாலும், செங்கோல் தொடர்பான நேரடியான குறிப்புகள் இல்லை. பிற மூன்று ஆற்றுப்படை நூல்களிலும் காணப்படும் செங்கோல் குறித்த பாடல்களை இங்கு காண்போம்...