பத்தி எழுதுபவர் எதைப் பற்றி வேண்டுமாயினும், விரிவாகவும், ஆழமாகவும் ஆய்ந்து எழுதுவார்; சில நேரங்களில் நாட்டு நடப்பை போகிற போக்கில் சொல்லிச் செல்வார்; சில நேரங்களில் நகைச்சுவைத் தோரணமாகவும் அந்தப் பத்தி எழுத்து இருப்பதுண்டு. இவை அனைத்திற்கும் முன்னோடியாக பாரதியின் ‘தராசு’ கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.