பாரதியார் – இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி

 ‘இலக்கிய வட்டம்’ இதழ்த் தொகுப்பில் மகாகவி பாரதி குறித்தும், அவர் நவீனத் தமிழிலக்கியத்துக்கு எப்படி ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பது குறித்தும்,  மறைந்த இலக்கிய விமர்சகரும் எழுத்தாளருமான திரு. க.நா.சு. எழுதிய கட்டுரை இது. அவர் ஒரு கூட்டத்தில் பாரதியின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்…

இலக்கியாசிரியரின் மனைவி

1955-ஆம் ஆண்டு க.நா.சு. எழுதிய இச்சிறுகதை, ‘இல்லறம் அல்லது நல்லறமன்று’ என்பதை எளிதாக நிலைநாட்டுகிறது. இலக்கியாசிரியையின் கணவன் என்ற பெருமிதத்தை விட, இலக்கியாசிரியன் என்பது சற்று மாற்றுக் குறைவு தானே? இக்கதையைப் படித்து முடிக்கையில் உங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தால், அதுவே இலக்கியாசிரியனின் பேறு!

சிட்டுக்குருவி

1955-இல் க.நா.சு. எழுதிய சிறுகதை இது... கொல்லையில் குருவி கட்டிய கூடு ஒரு சிறுகதையை மட்டும் உருவாக்கவில்லை, உறவுகளிடையிலான பந்ததையும் போகிற போக்கில் வெளிப்படுத்தி இருக்கிறது...

தர்மம்

நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் அமரர் க.நா.சுப்ரமணியம் (1912- 1988). தமிழ் நவீன இலக்கியத்தின் பார்வையை, போக்கைத் தீர்மானித்த ஆளுமைகளில் முதன்மையானவர். இதனை தனது இடையறாத, சுயநலமற்ற இலக்கியப் பணிகளால் அவர் சாதித்தார். தமிழ் காத்த நல்லோரான அவர் 1944-இல் எழுதிய ‘சிறு’ சிறுகதை இது. சிறுகதை என்பது, சமூகத்துக்கு நீட்டி முழக்கும் உபதேசமாக அல்ல, போகிற போக்கில் வருடிச் செல்லும் தென்றல் போல இருக்க வேண்டும் என்பதற்கு இக்கதை ஓர் உதாரணம்...