அனுமன் பெருமகிழ்ச்சியோடு அசோகவனத்துக்குச் செல்கிறான். என்னவென்று சொல்வது! சொல்ல வார்த்தை கிடைக்குமா? “அம்மா, நல்ல செய்தி” என்று சொல்வதா? “உனக்கு விடுதலை” என்று சொல்வதா? இவையெல்லாம் மிகவும் சாதாரணமான வார்த்தைகளாகத் தோன்றுகிறது அனுமனுக்கு.
Category: தொடர்
பாரதி போற்றும் தேசியக் கல்வி – பதிப்புரை
பொருள் புதிது தளத்தில் வந்த ‘பாரதி போற்றும் தேசியக் கல்வி’ தொடர் கட்டுரை தொகுக்கப்பட்டு, கோவையில் உள்ள சிவராம்ஜி சேவா அறக்கட்டளையால் நூலாக வெளியிடப்பட உள்ளது. இந்நூலுக்கு திரு. எஸ்.ஸ்ரீராம்ஜி அளித்துள்ள அணிந்துரை / பதிப்புரை இது...
ராமாயண சாரம் (28-29)
இராகவன் தன் புனித வாளி ராவணனின் மார்பைத் துளைத்து முதுகு வழி சென்றது. அவன் செருக்கையும், வலிமையையும் பறித்துக்கொண்டு போனது ‘ஒருவன்’ வாளி. ராவணன் மனதில் சீதை மேல் இருந்த ஆசையையும் துழாவி பறித்துக்கொண்டு வெளியே போனது ராமனுடைய வில்.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 8
கல்வி என்பது அறிவுப் பெருக்கமாக மட்டுமல்லாது, அதன் பயனாகவும் இருக்க வேண்டும். கோட்பாட்டு அறிவியல் பயன்பாட்டு அறிவியலாக மாறுகையில் தான், உலகம் பயனுறுகிறது. விண்ணியல் விதிகள் அனுபவமாகும்போது ராக்கெட் விண்ணைச் சாடிப் பாய்கிறது.
ராமாயண சாரம் (26-27)
வில் வித்தையில் பேராற்றல் கொண்ட ராமன், தன் ஒரு அம்பினால் ராவணனின் வில் முறிந்து போகச் செய்கிறான். ஒரே ஒரு அம்புதான்! ராவணன் வில் முறிந்தது. ராவணன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஈரேழு உலகிலும் தனை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்புக் கொண்டிருந்தவனை, ஒரே அம்பில் நிலைகுலையச் செய்கிறான் ராமன்.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 7
“சமுதாயம் என்பது ஒரு பறவையைப் போல! அதற்கு இரண்டு இறக்கைகள்! ஒன்று ஆண்,அடுத்து பெண். ஓர் இறக்கையால் மட்டும் பறவை பறக்காது” என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை சகோதரி நிவேதிதை, மகாகவி பாரதியிடம் விதைத்தார். அவரைத் தனது மானசீக குருவாக ஏற்ற பாரதி அதனையே தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார்.
ராமாயண சாரம் (24-25)
அன்றைய இரவு, மனித குலத்தின் ஓரு பெரும்போரை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. இலங்கையின் இரண்டு முனைகளில் இரண்டு மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இரண்டு வீரர்கள் ஒருவரோடு ஒருவர் பொருதற்குக் காத்திருந்தனர். அடிபட்ட புலிபோல, தர்மத்தை நிலைநாட்ட வேண்டி ராமன் ஒரு முனையில். அதர்மியாக, அதீத ஆசை கொண்டு, யார் பேச்சையும் மதிக்காமல் திமிர் பிடித்த ராவணன் மறுமுனையில்.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 6
கல்வி மட்டுமல்லாது மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துதல் அவசியம் என்கிறார் மகாகவி பாரதி. அவரது ‘தேசியக் கல்வி’ திட்டத்தில் ‘சரீரப் பயிற்சி’க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
ராமாயண சாரம்- 23
நளன் வானரத் தச்சன் என்றறியப் பட்டவன். It was not a random choice. அனுமன் இலங்கை செல்ல வேண்டுமென்பதும் நளன் சேது செய்ய வேண்டும் என்பதும், அவரவர் திறமையை உணர்ந்தே. Horses for courses.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 5
மகாகவி பாரதி தான் முன்வைத்த தேசியக் கல்வி என்ற திட்ட்த்தில் வலியுறுத்தும் பாடங்கள்: 1. எழுத்து, படிப்பு, கணக்கு, 2. இலேசான சரித்திரப் பாடங்கள், 3. பூமி சாஸ்திரம், 4. மதப்படிப்பு, 5. ராஜ்ய சாஸ்திரம், 6. பொருள் நூல், 7. ஸயன்ஸ் அல்லது பெளதிக சாஸ்திரம், 8. சரீரப் பயிற்சி, 9. யாத்திரை (Excursion) ஆகியன. ...
ராமாயண சாரம் – 22
ராமனின் சிறந்த பக்தன் அல்லவா அனுமன்? கோபத்தில், உண்டு இல்லை என்று பண்ணிவிடுகிறான். ராவணன், சீதைக்கும் ராமனுக்கும், செய்த கொடுமைக்குப் பதில் சொல்லும் விதமாய் துவம்சம் செய்கிறான். அனுமனின் பராக்கிரமத்தை கம்பன் (at his best) தமிழில் வானளாவிய கவிதை செய்து வைத்திருக்கிறான்.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 4
மகாகவி பாரதி விரும்பிய கல்வி என்பது தேசியக் கல்வி ஆகும். அக்கல்வி ஆன்மிக அடிப்படையில் அமைந்திருக்கும். தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதாகவும், மாணவர்களை சொந்தக்காலில் நிற்கச் செய்வதாகவும், தேசியச் செயல்வீரர்களை உருவாக்குவதாகவும் அக்கல்வி அமைந்திருக்கும்....
ராமாயண சாரம் – 21
அதன் பின், சீதை, தன் கசங்கிய ஆடையில் முடிந்து வைத்திருந்த சூளாமணியைக் கொடுத்து “எப்பொழுதெல்லாம் ராமனின் நினைவு வருகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த சூளாமணியைப் பார்த்து ஆறுதல் அடைவேன். நீ என்னைப் பார்த்ததற்கான அடையாளமாக இதைக் கொண்டு செல்” என்று சொல்கிறாள்.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 3
பாரதி எழுதிய ‘தேசியக் கல்வி’ என்ற கட்டுரையில், பாரதி விரும்பிய சுதேசிப் பள்ளியின் இலக்கணமும், அங்கு பயிற்றுவிக்கப்பட வேண்டிய பாடங்களும், ஒரு தேர்ந்த கல்வியாளர் போல திட்டமிட்டு அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டு உவக்கிறோம்.
ராமாயண சாரம் (19-20)
தன் உயிரைத் துச்சமென மதித்து கடல் கடந்து தனியனாக வந்து அரக்கர் மாளிகையின் உட்புகுந்து சீதையைத் தேடி தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிய அனுமனுக்கு கோவில் வைத்து கும்பிட்டு நன்றி சொல்வது நம் கடமை.