புதுவையில் பூத்த யோக மலர்- 10

நான் ஏன் அரசியலை விட்டு விலகினேன்? ஏனெனில் நம்முடைய அரசியல் உண்மையில் இந்தியத் தன்மையுடன் இல்லை. இது ஐரோப்பிய இறக்குமதி. ஐரோப்பிய வழிமுறைகளை போலி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவும் தேவை. நீயும் நானும் ஐரோப்பிய பாணி அரசியலில் தான் ஈடுபட்டிருந்தோம். நாம் அதைச் செய்யாவிட்டால் தேசம் எழுந்திருந்திருக்காது; வளர்ச்சி வந்திருக்காது. இன்னமும் அது தேவைப்படுகிறது, குறிப்பாக வங்காளத்தில். ஆனால் நிழலை விட்டு விட்டு சாரத்தைப் பிடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது....