மன்னரின் அணிகலன்களான மணிமகுடமும், கூர்மையான வாளும், வெண்கொற்றக்குடையும், செங்கோலும் பொருள் பெறுவது அவர்களின் நடுநிலைமை தவறாத, கோல் கோணாத, மக்களைப் புரக்கும் அருளாட்சியால் தான். இதனை அவர்களின் கரத்தில் ஏந்தி இருக்கும் செங்கோல் அவர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.