கதை, கவிதை, கட்டுரை எதை எழுதினாலும், அதில் வாசகரின் அறிவை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமும், தேசிய சிந்தனையைச் சிறிதேனும் ஊட்டிவிட வேண்டுமென்ற தாகமும் கொண்டு இயங்கியவர் மகாகவி பாரதி. ஒரு சிறு குழந்தையுடனான கதாசிரியரின் வேடிக்கையான விளையாட்டு பதிவாகியுள்ள இக்கதையிலும் கூட, கர்ஸன் பிரபுவை கதையின் இறுதியில் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார் பாரதி…