சாந்திக்கு மார்க்கம் – 7

-வ.உ.சிதம்பரம் பிள்ளை 7. பூரண சாந்தியை அடைதல் புறப் பிரபஞ்சத்தில் இடைவிடாத குழப்பமும், மாறுதலும், அமைதியின்மையும் இருக்கின்றன; எல்லாப் பொருள்களின் அகத்திலும் கலைக்கப்படாத சாந்தி இருக்கின்றது; இவ்வாழ்ந்த மௌனத்தில் மெய்ப்பொருள் வசிக்கின்றது. மனிதன் இவ்விரட்டைத் தன்மையைக் கொண்டிருக்கிறான். புற அமைதியின்மையும் ஆழ்ந்த நித்திய சாந்தியும் ஆகிய இரண்டும் மனிதனுள் இருக்கின்றன. மிக மிகக் கொடிய புயல்காற்றும் செல்ல முடியாத மௌன ஆழங்கள் சமுத்திரத்தில் இருப்பதுபோல, பாவமும் துக்கமுமாகிய புயல் காற்றுக்கள் ஒருபோதும் கலைக்க முடியாத தூய மௌன … Continue reading சாந்திக்கு மார்க்கம் – 7

சாந்திக்கு மார்க்கம் – 6

விவசாயம் செய்வோன் தனது நிலத்தில் உழுது, உரம் போட்டு, விதை விதைத்தபொழுது, அவன் தான் செய்யக் கூடியவற்றையெல்லாம் செய்து விட்டானென்றும், தான் பஞ்சபூதங்களை நம்பியிருக்க வேண்டுமென்றும், தான் மகசூல் வருங்காலம் வரையில் பொறுமையாயிருக்க வேண்டுமென்றும், தான் எவ்வளவு ஆத்திரப்பட்டாலும் அது விளைவை எவ்வகையிலும் பாதிக்காதென்றும் அறிவான். அதே மாதிரியாக, மெய்ப்பொருளை உணர்ந்தவன் பலன்களை எதிர்பாராமல் நன்மை, தூய்மை, அன்பு, சாந்தி, என்னும் வித்துக்களை விதைத்துக்கொண்டே போகிறான்; உரிய காலத்தில் பலனைக் கொடுப்பதும் ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் மூலமாகிய அடக்கியாளும் பெரிய சக்தி இருக்கிறதென்பது அவனுக்குத் தெரியும்....

சாந்திக்கு மார்க்கம்- 5

மனிதனுடைய ஆத்மா கடவுளிடத்தினின்று பிரிக்கப்பட முடியாதது; கடவுள் தவிர வேறு எஃதாலும் திருப்தியடைய மாட்டாதது; மனிதன் இந்த ஸ்தூல உலகைப் பற்றி அலைந்து கொண்டிருத்தலை நிறுத்தி, நித்தியப் பொருளின் உண்மைத் தன்மையிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிவரும் வரையில், துன்பத்தின் சுமை அவனுடைய ஹிருதயத்தை அமுக்கிக் கொண்டேயிருக்கும்; துக்கத்தின் நிழல்கள் அவனுடைய வழியை இருட்படுத்திக் கொண்டேயிருக்கும்....

சாந்திக்கு மார்க்கம் – 4

எளியவரை இகழ்தலை வலியவர் நிறுத்தட்டும்! வலியவரை நிந்தித்தலை எளியவர் நிறுத்தட்டும்! பேராசைக்காரர் எப்படி ஈவது என்றும், காமிகள் எப்படித் தூயர் ஆகலாம் என்றும் அறியட்டும்! கட்சிக்காரர் சண்டையிடுவரை நிறுத்தட்டும்; கருணையில்லாதவர் மன்னிக்கத் தொடங்கட்டும்! பொறாமைக்காரர் மற்றவரோடு சேர்ந்து சந்தோஷிக்க முயற்சிக்கட்டும்! பிறரை நிந்திப்போர் தமது நடத்தையைப் பின்பற்றி நாணம் அடையட்டும்! ஆடவர்களும் மகளிர்களும் இந்த வழியைப் பற்றட்டும்! நல்ல காலம் இதோ வந்துவிட்டது. ஆதலால், எவன் தனது அகத்தைச் சுத்தப்படுத்துகிறானோ, அவனே உலக உபகாரி.

சாந்திக்கு மார்க்கம் – 3

உண்மையான வலிமையையும் செல்வாக்கையுமுடைய ஆடவரும் மகளிரும் சிலரே; ஏனெனில், வலிமையை அடைவதற்கு அவசியமான தியாகத்தைச் செய்தற்குச் சிலரே தயாராயிருக்கின்றனர்; பொறுமையோடு ஒழுக்கத்தை வளர்ப்பதற்குத் தயாராயிருப்பவர் அவரினும் சிலரே.....

சாந்திக்கு மார்க்கம் – 2

மனித ஆன்மாவின் அமர்க்களத்தில் அகத்தின் ஆள்கைக்காகவும், அரசுக்காகவும், ஆதிபத்திய கிரீடத்திற்காகவும் இரண்டு தலைவர் அமர் புரிகின்றனர். அவரில் ஒருவன் 'யான்' என்னும் தலைவன்; 'இவ்வுலக அரசன்' என்றும் சொல்லப்படுபவன்; மற்றொருவன் மெய்ப்பொருள் என்னும் தலைவன்; தந்தையாகிய கடவுள் என்றும் சொல்லப்படுவான். 'யான்' என்னும் தலைவன்; காமம், கர்வம், பேராசை, வீண் பெருமை, பிடிவாதம் என்னும் இருட் கருவிகளைக் கைக்கொண்டு கலகம் விளைப்பவன். மெய்ப்பொருள் என்னும் தலைவன் இனிமை, பொறுமை, தியாகம், பணிவு, அன்பு என்னும் ஒளிக்கருவிகளைக் கொண்டு அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பவன்......

சாந்திக்கு மார்க்கம்- 1

ஜேம்ஸ் ஆலன் எழுதிய  ‘From Poverty to Power’ என்ற நூலின் இரண்டாம் பகுதி  ‘The way to peace’ ஆகும். அதனை வ.உ.சி.  ‘சாந்திக்கு மார்க்கம்’ என்று மொழிபெயர்த்தார்.

“சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கேற்ப, ஆங்கிலத்தில் புகழ் பெற்ற இந்த நூலை தமிழ்கூறு நல்லுலகம் அறிவதற்காக மொழிபெயர்த்திருக்கிறார் வ.உ.சி. இந்நூல் பல பகுதிகளாக இங்கே பதிவாகிறது…

வலிமைக்கு மார்க்கம்- 5

நியாயமென்று நீங்கள் நம்புகிற காரியத்தையே சகல சந்தர்ப்பங்களிலும் செய்யுங்கள்; மெய்ச் சட்டத்தை நம்புங்கள்; பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்காநின்ற தெய்வ சக்தியை நம்புங்கள்; ஒருபோதும் உங்களை அது கைவிடாது; எப்பொழுதும் உங்களை அது காப்பாற்றும். அத்தகைய நம்பிக்கையால் உங்களுடைய நஷ்டங்களெல்லாம் இலாபங்களாக மாறும்; உங்களை வருத்துகின்ற நிந்தனைகளெல்லாம் ஆசீர்வாதங்களாக மாறும். உண்மையையும் தயாளத்தையும் அன்பையும் ஒருபொழுதும் நீங்கள் கைவிடாதீர்கள். அவை உங்களை உண்மையான வலிமையுள்ள நிலைமைக்கு உயர்த்துமாகலான்,  ‘தனக்குப் போய்த் தானம்’ என்று உலகத்தார் சொல்வதை நீங்கள் நம்பாதீர்கள். அதனை நம்புதல் ஒருவனது சொந்த சௌகரியங்களை மட்டும் நினைக்கும்படி செய்யுமேயன்றி, மற்றவர்களைப் பற்றி நினைக்கவே விடாது. ... (வ.உ.சி.யின் ‘வலிமைக்கு மார்க்கம்’ நூலின் கடைசி இரு அத்தியாயங்கள்)...

வலிமைக்கு மார்க்கம்- 4

உண்மையான ஆரோக்கியமும் உண்மையான வெற்றியும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தே நிகழ்கின்றன; ஏனெனில், நினைப்புலகத்தில் அவையிரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாத விதத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. மன நேர்மை சரீர ஆரோக்கியத்தை உண்டு பண்ணுவதுபோல, ஒருவன் குறித்த காரியங்களை நேராகச் செய்து முடிக்குமாறும் செய்கின்றது. நீங்கள் உங்கள் நினைப்புக்களை ஒழுங்குபடுத்துங்கள்; உங்கள் வாழ்க்கை ஒழுங்காகி விடும். விருப்பும் வெறுப்புமாகிய கலக்க நீரில் அமைதியாகிய நெய்யை வாருங்கள்; கேடாகிய புயல் எவ்வளவு அச்சத்தை உண்டாக்கினும் வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் செல்லும் உங்கள் ஆன்மப்படகை உடைக்கச் சக்தியில்லாததாய்விடும். அப்படகை உற்சாகத்தோடும் அசையாத நம்பிக்கையோடும் செலுத்துவீர்களாயின், அது கரைக்குப் போய்ச் சேர்வது நிச்சயத்திலும் நிச்சயம். மற்றபடி அதனைத் தாக்கக்கூடிய பல புயல்கள் அதனைத் தாக்காமல் அதன் பக்கத்திற் கூடிச் சென்றுவிடும். நம்பிக்கையின் பலத்தினாலேயே நிலைநிற்கும் ஒவ்வொரு வேலையும் செய்யப்படுகின்றது. நீங்கள் வெற்றியடைய விரும்பின், நீங்கள் அழியாது நிலைநிற்க விரும்பின், மெய்ப்பொருளிடத்து நம்பிக்கை வையுங்கள்; எல்லாவற்றையும் ஆள்கின்ற அம்மெய்ப்பொருளின் நீதியினிடத்து நம்பிக்கை வையுங்கள்; உங்களுடைய வேலையிலும் அதனைச் செய்து முடிக்கும் உங்கள் பலத்திலும் நம்பிக்கை வையுங்கள். இந்நம்பிக்கையாகிய மலையின்மீது உங்கள் கட்டடத்தைக் கட்டுங்கள். ... (வ.உ.சி.யின் ‘வலிமைக்கு மார்க்கம்’ நூலின் 10வது அத்தியாயம்)...

வலிமைக்கு மார்க்கம்- 3

”நீங்கள் நல்ல நினைப்புக்களை நினையுங்கள். அவை உங்கள் புறவாழ்க்கையில் நல்ல நிலைமைகளில் உருக்களோடு விரைவில் வந்து பொருந்தும். நீங்கள் உங்கள் மனோ சக்திகளை அடக்கி ஆளுங்கள். நீங்கள் உங்கள் புறவாழ்க்கையை உங்கள் இஷ்டப்படி திருத்திக் கொள்ளத்தக்க சக்தியுள்ளவர்களாவீர்கள். ஒரு புண்ணியவான் தனது அகத்திலுள்ள சகல சக்திகளையும் பூரணமாக ஆள்கிறான். ஒரு பாவி தனது அகத்திலுள்ள சகல சக்திகளாலும் பூரணமாக ஆளப்படுகிறான். இதுதான் இவ்விருவருக்குமுள்ள வித்தியாசம்.” (வ.உ.சி.யின் வலிமைக்கு மார்க்கம் நூலின் 8, 9 அத்தியாயங்களில் இருந்து)...

வலிமைக்கு மார்க்கம்- 2

...குழந்தையானது குமரன் அல்லது குமரியாவதற்கு அழுகின்றது; குமரனும் குமரியும் தமது கழிந்த குழந்தைப் பருவத்தை நினைத்துப் பெருமூச்சு எறிகின்றனர். எளிய மனிதன் தனது வறுமை விலங்கால் வருந்துகின்றான்; வலிய மனிதன் தன்பால் வறுமை வந்துவிடுமோ என்ற அச்சத்தால் வருந்துகிறான் அல்லது தான் சுகமெனக் கருதுகின்ற நிலையற்ற ஒரு சாயையை அடைவதற்காக உலகத்தை வருத்துகிறான். சில வேளைகளில் ஆன்மா ஒரு மதத்தைத் தழுவுவதாலோ, ஒரு மனோதத்துவ சாஸ்திரத்தைக் கற்பதாலோ ஒரு மனக்கொள்கையை அல்லது தொழிற் கொள்கையை அனுசரிப்பதாலோ, தான் நிலையுள்ள அமைதியையும் சுகத்தையும் அடைந்துவிட்டதாகக் கருதுகின்றது. ஆனால் விலக்கமுடியாத ஓர் ஆபத்து அம்மதத்தைத் தகுதியற்றதாக்கி விடுகின்றது; அத்தத்துவ சாஸ்திரத்தைப் பயனற்றதாக்கி விடுகின்றது; பல வருஷங்களாக வருந்திக் கைக்கொண்ட அக்கொள்கையை ஒரு நிமிஷத்தில் தூள் தூளாக்கி விடுகின்றது.... (வ.உ.சி.யின் ’வலிமைக்கு மார்க்கம்’ நூலின் 6, 7 அத்தியாயங்கள்)...

வலிமைக்கு மார்க்கம் -1

இந்நூல் ஸ்ரீ ஜேம்ஸ் ஆலன் அரிய நூல்களில்  ‘எளிமையிலிருந்து வலிமைக்கு’ எனப் பொருள்படும் ஓர் அழகிய நூலினது முதற் பாகத்தின் மொழிபெயர்ப்பு. ...ஸ்ரீ ஜேம்ஸ் ஆலன் நூல்களெல்லாம் உலகத்திற்கு, முக்கியமாக நம் தேசத்திற்கு, மிக்க நன்மை அளிப்பவையென்பது அறிவிற் சிறந்த பலருடைய அபிப்பிராயம். அந்நூல்கள் நம் வள்ளுவர் மறைக்கொப்பப் போற்றத்தக்கவை. ஆகவே அந்நூலில் கூறியுள்ள பொருள்களைக் கசடற உணர்ந்து கைக்கொண்டொழுகுபவர் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் மனிதர் அடையக்கூடிய மேலான நிலைகளையெல்லாம் அடைவரென்பது திண்ணம். -வ.உ.சி.

அகமே புறம் – வ.உ.சி.

ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலனின் ‘Out from the heart’ என்ற சுய முன்னேற்ற நூலை, சுதேசி நாயகரும் சுதந்திரப் போராட்ட வீரருமான வ.உ.சி. ‘அகமே புறம்’ என்று 1916-ல் மொழிபெயர்த்தார். தமிழின் சுய முன்னேற்ற நூல்களில் இதுவே முன்னோடி. அந்த மொழியாக்கமே இங்கு 10 அத்தியாயங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளது…