வையத் தலைமை கொள்!- 7

ஔவையின் ஆத்திசூடி, தமிழ்ப் பேரரசுகளின் வீழ்ச்சிக் காலத்தில் எழுதப்பட்டது. சமுதாயத்தில் ஒரு கட்டமைப்பையும் ஒழுங்கையும் உருவாக்கவே நீதிநூல்கள் எழுதப்பட்டன. அக்காலத்தில் அதனை ஆத்திசூடி முழுமையாக செய்தது. பாரதியின் காலம், தாய்நாடு மிலேச்சர்தம் கொடுங்கரங்களில் சிக்கித் தவித்த காலம். எனவே, சில இடங்களில் அவர் முந்தைய கட்டுக்களைத் தகர்க்கத் துணிகிறார். இதுவே பாரதி சில இடங்களில் ஔவையுடன் மாறுபடக் காரணம். இது அவரது புதிய பார்வை. அதனால் தமிழ் இலக்கியத்தில் விளைந்தது புதிய பாதை....

வையத் தலைமை கொள்!- 6

இளைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்; அவர்கள் தங்கள் குணத்தை, வலிமையை, அறிவை, சமூக உணர்வை, நடையழகை, எண்ணத்தை எவ்வாறு வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொன்ன பாரதி, அவற்றின் மூலமாக செய்ய வேண்டிய கடமைகளையும் பட்டியலிட்டுள்ளார். தனி மனித வளர்ச்சியானது அவனது குடும்பத்துக்கும், ஊருக்கும், அவன் பிறந்த நாட்டுக்கும், அதனால் இந்த உலகிற்கும் நன்மை தருவதாக அமைய வேண்டும். இதுவே பாரத பாரம்பரியம்....

வையத் தலைமை கொள்!- 5

ஒருவர் அடிப்படையாகப் பெற வேண்டிய குணநலன்கள், உடல் வலிமை, கல்வித் திறம் ஆகியவற்றைப் பெற்றிருந்தாலும், அவனது நடையழகும், நல்லெண்ணமும், சமுதாய உணர்வும்தான் அவனை அவையத்து முந்தி இருக்கச் செய்கின்றன; இலக்கை நோக்கி அவனை உந்தித் தள்ளுகின்றன. தனது ‘நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும், வருகின்ற ஹிந்துஸ்தானமும்’ என்ற கவிதையில், எப்படிப்பட்ட இளைஞர்கள் நாட்டில் இருக்க வேண்டும், எப்படிப்பட்டவர்கள் இருக்கக் கூடாது என்பதை அறுதியிட்டு உரைத்திருக்கிறார் பாரதி.

வையத் தலைமை கொள்!- 4

‘குணநலம் சான்றோர் நலனே’ என்பார் திருவள்ளுவர் (திருக்குறள்- 982). நாட்டின் குடிமகன் சான்றோனாக இருக்க வேண்டும் என்று விழையும் பாரதி, அதற்கான பண்பு நலங்களைக் கூறிச் சென்றிருக்கிறார். அச்சமே மனிதனை கீழ்நிலைக்குத் தள்ளுகிறது என்பதால்தான் ‘அச்சம் தவிர்’ என்று தனது புதிய ஆத்திசூடியைத் துவக்குகிறார் பாரதி.  ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்ற திருக்குறளை (1075) இங்கு நினைவு கூரலாம்....

வையத் தலைமை கொள்!- 3

நாம் ‘புதிய ஆத்திசூடி’யை 7 அம்சங்களாகத் தொகுத்துக் கொள்ளலாம். அதாவது, பண்பு நலம், உடல்நலம், அறிவுநலம், நடைநலம், எண்ணநலம், சமூகநலம் ஆகியவற்றை வளர்ப்பதன் வாயிலாக, கடமைநலத்தை நிறைவேற்ற மகாகவி பாரதி வலியுறுத்துகிறார் எனலாம்....

வையத் தலைமை கொள்!- 2

குழந்தைகள் மனனம் செய்ய எளிதாக இருக்க வேண்டும்; அதன்மூலம் மொழியின் கட்டுமானத்தையும் இயல்பாக உணர வேண்டும் என்பதற்காகவே பண்டைய திண்ணைப்பள்ளிகளுக்கான நீதிநூல்களை இம்முறையில் நமது முன்னோர் இயற்றினர். அவர்களின் அடியொற்றி, மகாகவி பாரதியும் இதே நடையில் ‘புதிய ஆத்திசூடி’யை இயற்றி உள்ளார். மேலும், தனது உபதேசங்களில் தான் விரும்பும் பல அம்சங்களை வலியுறுத்திச் செல்கிறார். அவரது புதிய ஆதிச்சூடியை ஏழு அம்சங்கள் கொண்டவையாகப் பிரிக்கலாம்.....

வையத் தலைமை கொள்!- 1

ஆத்திசூடி ஒரு ஸ்மிருதி நூல். அதனை தனது காலத்தில் வாழும் மக்களுக்காக மாற்றி எழுத வேண்டும் என்று தீர்க்கதரிசனப் புலவர் பாரதி விரும்பியதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ்த்தாய் மீது மிகுந்த பற்றும், தமிழ்மகள் ஔவை மீது மிகுந்த மரியாதையும் கொண்டிருந்த மகாகவி பாரதியின் ’புதிய ஆத்திசூடி’ அவ்வகையில் ஒரு பெரும் ஆதர்ஷ இலக்கியமாக நம்முன் உள்ளது. ஔவையார் 109 வரிகளில் பாடிய ஆத்திசூடியை, 110 வரிகளுடன் புதிய ஆத்திசூடியாகப் பாடுகிறார் பாரதி.....