கதைக்குள்ளே கதை சொல்கிற பான்மையில் அமைந்தவை இந்த நவதந்திரக் கதைகள். பஞ்சதந்திரக் கதைகளைப் போன்ற கதைப் போக்குக் கொண்டது என்றும் கொள்ளலாம். மகாகவி பாரதியின் கதை சொல்லும் வன்மைக்கு இக்கதைகள் மிகச் சிறந்த சான்று. இவை, தொடராக முதன்முதலாக ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் 10-8-1916ஆம் தேதியிட்ட இதழில் பிரசுரமாகத் தொடங்கியது. இடையிடையே சில சமயங்களில் கதைத் தொடர் பிரசுரமாகாமல் இருந்ததும் உண்டு. கதைத் தொடர் நிறைவு பெறவில்லை; 26-2-1918ஆம் தேதிய இதழோடு நின்று விடுகின்றது. இந்தக் கதைகள் 1928 ஆம் வருஷம் பாரதி பிரசுராலயத்தாரால் நூலாக்கம் செய்யப்பட்டன....
Tag: பாரதி புதினம்
சின்னச் சங்கரன் கதை
முற்றுப் பெறாமல் நமக்குக் கிடைத்த மகாகவி பாரதியின் கதைப் பொக்கிஷங்களுள் ‘சின்னச் சங்கரன் கதை’யும் அடங்கும். இந்தக் கதைத் தொடர் தியாகசீலர் சுப்பிரமணிய சிவம் நடத்திய ‘ஞானபாநு’ மாதப் பத்திரிகையிலே 1913 மே மாத இதழில் முதன்முதலாக வெளிப்பட்டது; 1914 மார்ச் மாத இதழுடன் கதைத் தொடர் பிரசுரமாகவில்லை. அதாவது, நான்கு அத்தியாயங்களே பிரசுரமாகி உள்ளன. இந்தக் கதையை பாரதி தமது சொந்தப் பெயரில் எழுதாமல், ‘சாவித்திரி’ என்ற புனைபெயரில் எழுதினார். கதையின் தொடர்ச்சியைப் பாரதி எழுதத் திட்டமிட்டிருந்தார் என்பதை அவர் எழுதிய குறிப்பொன்றால் தெரிந்துகொள்ள முடிகின்றது. பாரதியின் அதீத நையாண்டித் திறனுக்கு அற்புதமான உதாரணம், இந்த முற்றுப் பெறாத புதினம்....
ஞானரதம் (9- 11)
ஐயோ! என்ன உலகமடா, இந்த மண்ணுலகம்! ஒழியாத ஏமாற்று, ஒழியாத வஞ்சனை, ஒழியாத கவலை, ஸாரமில்லை, ஸத்துக் கிடையாது: உள்ளூரப் பூச்சியரித்துக் குழலாய் இருக்கும் வாழ்க்கை; ஒவ்வொருவனும் மற்றவன் மீது பழி கூறுகின்றான். ஒவ்வொருவனும் தன்னிஷ்டப்படி விட்டுவிட்டால் எல்லாம் நேராக நடக்குமென்ற நம்பிக்கையுடனே தான் இருக்கிறான், ஆனால், “நான் ஒருவன் சரியாக இருந்தால் போதுமா? மற்றவர்களை நம்புவதற்கிடமில்லையே” என்று நினைக்கிறான். பிறரை நம்புவதற்கிடமில்லையென்றெண்ணி ஏமாற்றுகிறான். ஐயோ மூடா நீ ஏமாற்றுவதனால், முன்னைக் காட்டிலும் பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து விடுமென்றா நினைக்கிறாய்? மனித ஜாதிக்கு தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது. மாறாத சாபம். இறங்காத விஷம். இதன் பெயர் பணம். (மகாகவி பாரதியின் ஞானரதத்தில் இருந்து)...
ஞானரதம் (1-8)
மகாகவி பாரதியின் ’ஞானரதம்’ பாரதியின் உரைநடைக் கதை; குறும் புதினம்; அற்புதமான தத்துவ விசாரணை. ஆங்காங்கே தேசத்தின் வீழ்ச்சி குறித்த புலம்பலுடன் விழிப்புணர்வூட்டும் கடமையுணர்வும் உண்டு.... வாழ்வின் உன்னதக் கணமொன்றைத் தேடியலையும் பாரதியின் ஆன்மா, தன்னையே கதையின் நாயகனாக்கி, மன ரதமேறி வெவ்வேறு உலகங்களில் சஞ்சாரம் செய்கிறது. கற்பனைகளுக்கும், நினைவுகளுக்கும் தூரம் என்பது ஒரு பொருட்டாகுமா, என்ன? துன்பங்களை ஊடறுத்துச் சென்றுவர பாரதி தேர்வு செய்த ஐந்து உலகங்களும் உலகின் ஒவ்வொரு மனிதனுக்கானவையே....தற்காலத்தில் ‘டைம் மெஷின்’ (கால இயந்திரம்) என்ற கருதுகோளுடன் புதினங்கள் புனையப்படுகின்றன. இதற்கு ஒப்பான ஒரு சிந்தனையை நூறாண்டுகளுக்கு முன்னமே தமிழ் இலக்கியத்தில் தனது ஞானரதம் வாயிலாக அறிமுகப்படுத்தியவர் பாரதி என்று சொல்லலாம். அதிலும் தன்னையே கதையின் நாயகன் ஆக்கிக்கொண்டு, சுய எள்ளலுடன் எதையும் அணுகும் சமநிலைப் பார்வை, இந்தப் படைப்பை பேரிலக்கியம் ஆக்குகிறது.....
சந்திரிகையின் கதை – பாரதி
மகாகவி பாரதியின் இறுதிப் படைப்பு ‘சந்திரிகையின் கதை’. ஆனால், இது முற்றுப்பெறுவதற்கு முன்னமே, பாரதியின் வாழ்வு முற்று பெற்றுவிட்டது. அதன் காரணமாக, தமிழ் மொழி ஓர் அற்புதமான இலக்கியத்தை இழந்துவிட்டது. சுதேசமித்திரன் வார இதழில் தொடராக வந்த இந்தப் புதினம், அவரது அகால மறைவால் முற்றுப் பெறாமல் போய்விட்டது. எனினும், மகாகவி பாரதியின் பன்முக தரிசனத்துக்கு அவரது முற்றுப் பெறாத இந்த இறுதிப் படைப்பு ஒளிவீசும் மகுடமாகத் திகழ்கிறது. தனது தத்துவ விசார நாட்டம், நையாண்டி செய்யும் நளினம், நகைச்சுவை உணர்வு, இலக்கியப் பரிச்சயம், மனிதநேய சிந்தனைகள் ஆகியவற்றின் கதம்பமாக இதனைப் படைத்திருக்கிறார் பாரதி.