‘பஞ்சகோணக் கோட்டை’ என்ற தத்துவார்த்தமான இந்தக் கதை திரு. வ.ரா. புதுவையில் நடத்திவந்த ‘சுதந்திரம்’ என்ற மாதப் பத்திரிகையில் வெளிவந்தது; பிறகு, 1945 செப்டம்பர் 9-ஆம் தேதி இது சென்னை ‘ஹநுமான்’ வாரப் பதிப்பிலும் வெளியாயிற்று. உண்மையில், சமுதாயத்திற்கு அறிவுரை கூற வந்த மகாகவி பாரதியின் அற்புதமான கட்டுரை இது...
Tag: பாரதி உரைநடை
ரஸத் திரட்டு
எல்லா மனிதரும் சமமென்ற கொள்கையை ஸமூஹ வாழ்க்கையில் ஸ்தாபனம் செய்யும்வரை மானிடருள்ளே இகல், பொறாமை, வஞ்சனை, போர் முதலிய ஏற்பாடுகள் நீங்க மாட்டாவாதலால் அக்கொள்கையை எப்படியேனும் அனுஷ்டானத்துக்குக் கொணர்ந்து விடவேண்டுமென்று ஐரோப்பிய ஞானிகள் பேராவல் கொண்டிருக்கின்றனர். இந்தியா ராஜாங்க விடுதலை பெற்றுவிடுமானால் தன் அனுஷ்டானத்தாலே உலகத்தாருக்கு இக்கொள்கையின் நலங்களை விளக்கிக் காட்டி உலகமுழுவதும் இதனைப் பரவச் செய்தல் ஸாத்யப்படும்.
பறையரும் பஞ்சமரும்
என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே! பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகிறார்கள். எல்லாரையும் அடிக்கப் பறையரால் முடியுமா? பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா? எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா?
நமது கல்விமுறையில் ஒரு பெருங்குறை
தாயுமானவரைப் போன்ற ஞானி ஒருவர் இங்கிலாந்திலே இருந்திருப்பாரானால் அவரைப் பற்றி அறியாத பாடசாலை மாணாக்கன் எந்த இடத்திலும் இருக்க மாட்டான். அவரது இனிய இசை நிரம்பிய அமிர்த கவிகளைக் கற்றேனும், அவரது சரித்திரம் முதலியவற்றைக் கேட்டேனும் அறியாத ஆயிரக் கணக்கான மூடர்கள் தம்மைக் கல்விமான்களென்றும், பட்டதாரிகளென்றும் கூறிக்கொண்டு இந்நாட்டிலே திரிகின்றார்கள்- மகாகவி பாரதி
தீண்டாமை என்னும் பாதகம்
சுதேசமித்திரனில் 1920-களில் மகாகவி பாரதி எழுதிய பதிவு இது... தீண்டாமை ஒழியாமல் தேச விடுதலை வசப்படாது என்ற தெளிவான பார்வையை பாரதி- காந்தி ஆகிய இரு மகான்களிடமும் கண்டு மகிழ்கிறோம்...
தமிழ் வசன நடை
நூறாண்டுகளுக்கு முன்னர், தமிழில் உரைநடை உருவாகிவந்த காலத்தில் அதற்கு இலக்கணம் இயற்றுகிறார் மகாகவி பாரதி. ” “கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி” என்று கூறும் அவர், ”வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக யிருக்க வேண்டும்” என்கிறார். “உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ் நடை எழுதும்” என்று நமக்கு வழிகாட்டுகிறார்....
கவிதையின் இலக்கணம்
கவிதையின் இலக்கணம் குறித்த மகாகவி பாரதியின் இந்தக் கட்டுரையில் (சுதேசமித்திரன்) ‘ஹொக்கு’ என்று குறிப்பிடப்படுவது தான் இன்றய ஹைகூ கவிதை.நூறாண்டுகளுக்கு முன்னமே அதனை அறிந்திருந்தார் நமது மகாகவி. பாரதியின் வசன கவிதைகளே தமிழ்ப் புதுக்கவிதைக்குத் தோற்றுவாய். இக்கட்டுரையில் கூறியுள்ள பல அம்சங்களை தனது வசன கவிதைகளில் மகாகவி பாரதி பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.
ரெயில்வே ஸ்தானம் – சிறுகதையும் மறுப்பும்
மகாகவி பாரதி, தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், ‘சுதேசமித்திரன்’ இதழில் சமகால உலகம், அரசியல், சமயம், பண்பாடு தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நையாண்டிக் கதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். அந்த வகையில் ‘சுதேசமித்திரன்’ (22-5-1920) இதழில் அவர் எழுதிய கதை, ‘ரெயில்வே ஸ்தானம்’. இஸ்லாமிய மக்களிடையே உள்ள பலதார மணத்தை விமர்சிக்கும் வகையிலும், முஸ்லிம் மாதரின் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதாகவும் இக்கதையை எழுதியுள்ளார் பாரதி. எனினும், இக்கதையில் சிறு தகவல் பிழை இருப்பதாக அவரது இஸ்லாமிய நண்பர் கூறியதையும் ‘சுதேசமித்திரன்’ இதழில் 'முகமதிய ஸ்திரீகளின் நிலைமை' என்ற கட்டுரையாக வெளியிட்டு, தனது பிழைக்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார். என்றபோதும், முஸ்லிம் மாதரின் உரிமைக்காக தனது இஸ்லாமிய நண்பரிடம் தொடர்ந்து வாதிடுகிறார். சமூக மாற்றத்துக்காகத் துடித்த மகாகவி பாரதியின் இதயம், மதம் கடந்து சிந்தித்ததையும் இந்த சிறுகதை மற்றும் கட்டுரையில் காண முடிகிறது.
தொழிலுக்கும் செல்வத்துக்குமுள்ள சம்பந்தம்
தொழிலாளர் நலனில் மகாகவி பாரதிக்கு இருந்த அக்கறையை வெளிக்காட்டும் கட்டுரை இது... ‘சம்பள ஏற்றத்துக்கும் வேலை நேரத்தைக் குறைப்பதற்கும் வேண்டிய யத்தனங்கள் செய்யும் தொழிற்சங்கங்கள், ஆங்காங்கே பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்காக ஏற்படுத்தி அவற்றில் தம்முடைய மக்களுக்கு நிறைந்த கல்வி யூட்டுவதற்குரிய முயற்சிகள் செய்ய வேண்டும்’ என்கிறார் இந்ந்தக் கட்டுரையில்...
ஜாதிக் குழப்பம்
“ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்த்ரம், ஸமத்வம், ஸஹோதரத்வம் என்னுங் கொள்கைகளை நிலைநிறுத்துவதென்றால், அது ஸாதாரண வேலையா?” மகாகவி பாரதியின் இதயப் பொருமலுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லையே?
ரிஷிகள் கடன்
இந்தியக் கல்வி முறையின் தொன்மை குறித்து எஸ்.கே.தத்தர் என்ற அறிஞர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையை சுதேசமித்திரனில் செய்தியாக்கி மகிழ்கிறார் மகாகவி பாரதி. எனினும் அவரது உரையில் உள்ள முரணையும் இறுதியில் சுட்டிக்காட்டுகிறார்...
ரங்கூன் ஸர்வகலா ஸங்க பஹிஷ்காரம்
பர்மாவில் பல்கலைக்கழகங்களை அதிகப்படுத்த வேண்டும்; அவை அனைவரும் பயிலக் கூடியதாக இருக்க வேண்டும். அதை விடுத்து, மாணவர்கள் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி மீது குற்றம் சாட்டுவது பயனற்றது என்கிறார் மகாகவி பாரதி. கூடவே பர்மாவையும் பம்பாய் மாகாணத்தையும் கல்விக்கூடங்கள் தொடர்பாக ஒப்பீடு செய்கிறார். “ஜெர்மனியிலும் ருஷியாவிலுந்தான் காலச் சக்கரம் சுழலுகிறதென்றும் பர்மாவில் சுழலவில்லையென்றும்” ஸர்க்கார் கருத வேண்டாம் என்று எச்சரிக்கவும் செய்கிறார்…
உலக நிலை
ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து எகிப்துக்கு விடுதலை அளிப்பதாக அறிவித்த பிரிட்டீஷ் அரசு பின்வாங்கியதையும், அதற்கு பலிகடாவாக குடியேற்ற மந்திரி லார்டு மில்நர் பதவி விலகி இருப்பதையும் இச்செய்தியில் விளக்குகிறார் மகாகவி பாரதி. இந்தச் செய்தியை அடக்கி வாசிக்க முயலும் ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்தையும் விளாசுகிறார்…
ஒரு கோடி ரூபாய்
நாட்டிற்கு சுதந்திரம் வேண்டுமென்றால் மக்கள் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டும் என்று மகாத்மா காந்தி விடுத்த அறைகூவலை ஏற்று இந்திய மக்கள் நிதியை காங்கிரஸ் கட்சிக்கு அள்ளி வழங்கினர். ஆனால், அந்தத் தொகையை காங்கிரஸ் என்ன செய்கிறது? என்று இச்செய்தியில் கேட்கிறார் மகாகவி பாரதி. “ஒப்பந்தத்தில் ஒரு பாதி நிறைவேறிப் போய்விட்டது. அதாவது ஜனங்கள் பக்கத்திலே விதிக்கப்பட்ட கடமை நிறைவேறிவிட்டது. இனித் தலைவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டியதைத் தவிர வேறொன்றும் இல்லை” என்கிறார்...
மஹாமகம்
மஹாமகம் தீர்த்தாடனம் குறித்து மகாகவி பாரதி எழுதிய அர்த்தப்பூர்வமான கட்டுரை இது. 1921 பிப்ரவரி 22-இல் நடைபெற்ற கும்பகோணம் மகாமகப் பெருவிழாவை ஒட்டி இக்கட்டுரையை மகாகவி சுதேசமித்திரனில் எழுதி இருக்கிறார். மஹாமகக் குளியலை கேலி பேசும் பிற மதத்தினருக்கு தகுந்த பதிலையும் இக்கட்டுரையில் தருகிறார் பாரதி...