இந்தியா (08.06.1907) சித்திர விளக்கம்

நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயரும் மகாகவி பாரதியும் சமகால அரசியலாளர்களாக இருந்தபோதும் கொள்கையில் இரு துருவங்கள். அவரை மகாகவி பாரதி கடுமையாக விமர்சித்தது, இருவரிடையிலான நட்பைக் குலைக்கவில்லை. இதோ, நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயர் குறித்து இந்தியா (08.06.1907) இதழில் வெளியான சித்திர விளக்கம். உடன் உள்ள பத்திரிகையாளர் திரு. சேக்கிழானின் சரித்திர விளக்கக் கட்டுரையும் கூடுதலாகப் பயன்படும்...

அன்னிபெசண்ட் அம்மையாரும் மகாகவி பாரதியும்

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த அயர்லாந்து மாதான அன்னிபெசன்ட் அம்மையார் (1857 அக். 1 - 1933 செப். 20), இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் பெரும் பங்கு ஆற்றியவர்.  மகாகவி பாரதிக்கு, அன்னிபெசன்ட் அம்மையார் மீது ஆரம்பத்தில் மேலான  அபிப்பிராயம் இல்லை. என்ன இருந்தாலும் அவர் ஓர் ஆங்கில மாது என்ற எண்ணமே இருந்தது. தவிர அவரது தியாஸபிகல் ஸங்கம் மீதும் பாரதிக்கு நல்லெண்னம் இருக்கவில்லை. எனவே ஆரம்பக் காலத்தில் அவரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். எனினும், அன்னிபெசன்ட் அம்மையாரின் பாரதம் மீதான அபிமானத்தை பாரதி மதித்திருக்கிறார். தனது எழுத்துகளில் அவரைப் பாராட்டவும் செய்கிறார். பாரதியின் தேசபக்தியும், நமது நாட்டுக்கு அன்னிபெசன்ட் அம்மையாரால் ஆகும் லாபமென்ன என்ற எண்ணமும் தான் அவர் மீதான கருத்துகளில் வெளிப்படுகின்றன....

‘புதிய ருஷ்யா’ கவிதையும் கவிஞரின் தீர்க்கதரிசனமும்

ரஷ்யாவில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்தை மாகாளியின் கடைக்கண் பார்வையால் நிகழ்ந்த யுகப் புரட்சி என்று மகாகவி பாரதி பாடியபோதும், அங்கு நிகழ்ந்த வன்முறைகளில் அவருக்கு விருப்பம் இல்லை. ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து கிடைத்த செய்திகளும் அவருக்கு உவப்பாக இல்லை. ஆட்சி அதிகாரம் மிக்கவர்கள் நடத்தும் வன்முறைகளால் நாட்டு மக்களுக்கு பயனேதும் கிடைக்காது என்று அவர் தீர்மானமாக நம்பினார். எனவேதான், சுதேசமித்திரனில், தனது சந்தேகங்களை ஒரு கட்டுரையாகவும் வடித்தார். மகாகவி பாரதியின் தீர்க்கதரிசன வார்த்தைகள் இப்போது உண்மையாகி விட்டதைக் காண்கிறோம். ஆயுதபலத்தாலும், வன்முறையாலும் நாட்டு மக்களை அடக்கி வைத்திருந்த கம்யூனிஸக் கூட்டம் 1990களில் சிதிலமடைந்து வீழ்ந்ததை உலகம் கண்டது. பல்வேறு நாடுகளை ஆயுதபலத்தால் சேர்த்து ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யக் குடியரசு (யுஎஸ்எஸ்ஆர்) என்ற வல்லரசாகத் தோற்றம் அளித்த ரஷ்யா பலகூறுகளாக இன்று சிதறிவிட்டது. அங்கு இப்போது லெனின் சிலைகள் உடைக்கப்படுகின்றன; கம்யூனிஸம் ஒரு கெட்ட வார்த்தையாகிவிட்டது....

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் மகாகவி பாரதி

மகாகவி பாரதியின் எழுத்துலகம் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சேக்கிழான் இப்பகுதியில் தொடர்ந்து எழுத உள்ளார். பாரதியின் கவிதைகள், இதழியல் பணிகள், மொழிபெயர்ப்புகள், காவியங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்த விரிவான ஆய்வுக் களமாக இத்தொடர் அமையும். இக்கட்டுரை, ’பாரதியின் விஸ்வரூபம்’ தொடரின் முதல் பகுதி. தமிழ்த் திரையுலகில், மகாகவி பாரதியின் கவிதைகள் பெற்றுள்ள இடத்தை விளக்குகிறது இக்கட்டுரை...