பூக்கள் பூக்கத் தொடங்கும் இளவேனில் காலத்தைத்தான் வசந்தகாலம் என்று நம் முன்னோர்கள் வரவேற்றனர். இவ்வகையில் வசந்த காலத் தொடக்கமாகிய சித்திரையில் புத்தாண்டும் மலர்கிறது. இந்தச் சித்திரைப் புத்தாண்டு, தமிழர்களுக்கு மாத்திரம் உரியது அல்ல, நாட்டின் பெரும்பாலான பகுதியினருக்கும் சித்திரை முதல் நாளே புத்தாண்டு. ...
Tag: பத்மன்
தமிழ்த்தாயைக் காத்த தனயன்
பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் தமிழை வளர்த்தார் என்பது தெரியும். கும்பகோணம் அருகே பிறந்த மற்றோர் அகத்தியர் தமிழைக் காத்தார் என்பது தெரியுமா?
பார் போற்றும் பரிதிக் கடவுள்
தமிழர் திருநாள் என்று சிறப்பித்துப் போற்றப்படும் தைப் பொங்கல் விழா, அடிப்படையில் ஒரு தேசியத் திருநாள் ஆகும். மகர மாதம் என்று அழைக்கப்படும் இந்தத் தை மாதத்தின் முதல் நாளன்றுதான், சூரியனின் ஒளி மிகுந்த வடதிசைப் பயணமான உத்தராயண புண்யகாலம் தொடங்குகிறது. ஆகையால் தைப் பொங்கல், மகர சங்கராந்தி என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாகவும் திகழ்கிறது. நமது ஹிந்து தர்மத்தின்படி, பண்பாட்டின்படி ஞாயிறு பிரத்யட்சக் கடவுளாக - அதாவது கண்ணால் காணப்படும் கடவுளாகத் திகழ்கிறார். “ஞாயிறு போற்றுதும்” என்று சிலப்பதிகாரத்தில் போற்றப்பட்டுள்ள அந்த சூரியக் கடவுள், காயத்ரி ஜபத்தின் மூலம் துதிக்கப்படும் அந்தக் கதிரவத் தெய்வம், எவ்விதம் உலகமெல்லாம் வணங்கப்படும் தெய்வமாக விளங்குகிறார் என்பதை, தைப் பொங்கல் திருநாளை ஒட்டி விளக்கும் விதமாக, மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் இந்தக் கட்டுரையை வழங்கி உள்ளார்.
சுவாமிஜியைக் கண்டெடுத்த தமிழகம்
‘பத்மன்’ என்ற பெயரில் எழுதிவரும் திரு. நா.அனந்த பத்மநாபன், பல நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர். சென்னையில் வசிக்கிறார். இதழியல் துறையில் பல்லாண்டுகால அனுபவம் உடைய இவர், தமிழக அரசின் விருது பெற்ற ’மூன்றாவது கண்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
கொன்றைவேந்தன் (86-91)
ஒரு செயலில் உற்சாகமாக இறங்குதல், செயலில் சந்திக்கும் இடையூறுகளை மனவலிமையோடு தாங்கிக் கொள்ளுதல், தோல்விகள் வந்தாலும் சோர்ந்து போய்விடாமல் தொடர்ந்து முயற்சி செய்தல், இலக்கை அடையும் வரை தொய்வின்றி உழைத்தல், வெற்றிக்குப் பின்னரும் ஓய்ந்து விடாமல் புதுப் புது முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுதல் ஆகியவை ஊக்கம் உடைமை ஆகும்.
கொன்றைவேந்தன் (81-85)
திதி என்றால் நாள். பிரதமை, துவிதியை முதல் அமாவாசை, பௌர்ணமி வரையாக கிருஷ்ணபட்சம், சுக்லபட்சம் என இரு 15 தினங்களாக இத் திதிகள் குறிக்கப்படும். அதிதி என்றால், இதுபோன்ற நாள், கிழமையற்ற எனப் பொருள். குறிப்பிட்ட தினத்தில்தான் வருவார்கள் என்று குறிப்பிட இயலாமல், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய புதியவர்களே அதிதிகள். அவர்களைத்தான் ‘விருந்து’ என்கிறது நம் பைந்தமிழ்.
கொன்றைவேந்தன் (76-80)
மௌன நிலையே ஞானத்தின் உச்சம் என்று போதிக்கிறார் ஔவையார். மோனம் என்பது மௌனம் ஆகும். இது பேசாப் பெருநிலை. அமைதியை மட்டும் இது குறிக்கவில்லை. மனத்தை ஒருநிலைப்படுத்தி ஆழ்ந்து சிந்திப்பதையும் குறிக்கிறது.
கொன்றைவேந்தன் (71-75)
நமது வினையே நமது விதியாகி நமக்கான விளைவைத் தீர்மானிக்கிறது. நாம் செய்யும் நன்மைகள், புண்ணியங்கள் அதற்கான சிறந்த பலன்களை நமக்குத் தருகின்றன. அதேபோல, தீமைகளும் பாவங்களும் தீய பலன்களை நமக்குக் கொடுக்கின்றன. நன்மை செய்ய இயலாவிட்டாலும் தீமை செய்யாமல் தவிர்க்கலாம். இதன்மூலம் பிறருக்கு மட்டுமல்ல, நமக்கு வரக்கூடிய தீமையையும் நாம் தடுக்கிறோம்.
கொன்றைவேந்தன் (66-70)
‘போனகம்’ என்பதற்கு உணவு, உணவு வகை எனப் பொருள். உழவு என்பது வேளாண் தொழிலை முக்கியமாகக் குறித்தாலும், வேறு எல்லா வகை கடின உழைப்புப் பணிகளையும் குறிக்கும். உழை என்பதற்கு வருந்தி முயற்சி மேற்கொள்ளல், கடினமாகப் பணியாற்றல் என்று பொருள். மற்ற எல்லாத் தொழில்களையும் விட விவசாயத்துக்கே அதிக உடல் உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால் ‘உழை’ என்பதை வேர்ச் சொல்லாகக் கொண்ட உழவு என்ற சிறப்புச் சொல், விவசாயத்துக்கு அமையப் பெற்றது.
கொன்றைவேந்தன் (61-65)
பெற்றோர் என்றதும் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்- தந்தையர் நினைவுக்கு வருவர். பிள்ளைப் பேறு பெற்றவர் என்பதால் அவர்களுக்கு பெற்றோர் எனப் பெயர். ஆயினும் பேறுகளில் பெரிய பேறு, மெய்யான பேறு, மெய்ஞானத்தைப் பெறுவதுதான். ஆகையால் அத்தகைய உண்மையான உயர் ஞானத்தைப் பெற்றவர்களையே பெற்றோர் எனக் குறிப்பிடுகிறார் ஔவையார்.
கொன்றைவேந்தன் (56-60)
எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். விதை ஒன்று போட சுளை வேறு விளையாது. இவையெல்லாம் முன்னோர்தம் அனுபவ உரைகள். தீமை செய்தவன் நன்கு வாழ்வதைப் போல காட்சி தருவான். ஆனால் திகைத்திட வீழ்ச்சி அடைவான். நல்லவன் துயருறுவதைப் போலத் தோன்றும். ஆனால் அவனது தர்மம் தலைகாக்கும், தலைமுறைகளையும் காக்கும். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்றார் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார்.
கொன்றைவேந்தன் (51-55)
நோன்புக்கு மனத்தூய்மையும் மனபலமும் மிகவும் அவசியம். நோன்பின் போது ஏற்படும் இடையூறுகளையும் கஷ்டங்களையும் வென்றெடுத்து, மேற்கொண்ட நோன்பை சிறப்புடன் நிறைவு செய்ய வேண்டும். அதற்கு அந்த நோன்போடு நாம் நேர்ப்பட வேண்டும். முறையாக அதற்கு உடன்பட வேண்டும்.
கொன்றைவேந்தன் (46-50)
நாடு முழுவதும் வாழ என்று சொல்லும்போது நாட்டுமக்கள் அனைவருமே நலமுடன் வாழுதல் என்ற பொருளும் அடங்கியுள்ளது. இதைத்தான் இன்றைய மத்தியஅரசு ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்று கூறி செயல்படுத்த முனைப்புக் காட்டுகிறது. நாட்டு வளர்ச்சியின் பயன், கடையருக்கும் மடைமாற்றமின்றி போய்ச்சேர வேண்டும். அப்போதுதான் நாடு முழுவதும் வாழும்.
கொன்றைவேந்தன் (41-45)
கைதவம் என்றால் வஞ்சனை, கபடம், சூது என்று பொருள். தெய்வம் கருணைக்கடல், மிகவும் பொறுமையானது. ஆயினும் உலகில் வஞ்சகக் கொடுமை மிகுந்துகொண்டே வந்தால், அந்த அசுரத்தனத்துக்கு முடிவுகட்ட தெய்வம் அறச்சீற்றத்தோடு பேரச்சம் தரும் உருவில் தோன்றும். அப்போது வஞ்சனை அழியும்.
சனாதனத்தில் சமத்துவம்
தற்காலத்தில் பொருளறியாமல் அரசியல் வியாதிகளால் அதிக அளவில் புண்படுத்தப்படும் சொல் ‘சனாதனம்’. அதிலும், அதிலும், திராவிட அரசியல் (திராவிடம் என்பதும், அதுவும் பொருளறியாத - அநர்த்தக் கும்பலிடம் சிக்கித் தவிக்கிறது) பேசுவோர் சனாதனத்தை அழிப்பதாகவே முழங்குகின்றனர். இதனால், பலர் குழப்பமடைகின்றனர். அவர்களைத் தெளிவுபடுத்துகிறது திரு. பத்மன் எழுதியுள்ள இக்கட்டுரை....