பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும் – நூல் மதிப்புரை

இந்திய சமூக வாழ்வில் பசுக்களுக்கு பிரதான இடமுண்டு. அந்நியர் ஆட்சிக்காலத்தில் இந்த அடிப்படை ஆதாரத்தின் மீது கொடூரத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டபோது, அதற்கு எதிராக சமுதாயம் கடுமையாகவும், துணிச்சலாகவும் தொடர்ந்து போராடியிருக்கிறது. அதற்கான சான்றாவணமே  ‘பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்’ என்னும் இந்நூல்.

பாரதீயப் பெண்மணிகள்: ஒரு முழுமையான பார்வை – நூல் மதிப்புரை

 62 பக்கங்கள் கொண்ட சிறிய நூல் இது. ஏழு அத்தியாயங்கள் உள்ளன. வேதகாலம் தொடங்கி இன்றுவரை இந்தியப் பெண்களின் நிலையை ஒரு பருந்துப் பார்வையாகக் கூறுகிறார் நூலாசிரியர்.

ஈ.வெ.ரா.வின் முகத்திரையைக் கிழிக்கும் நூல்- மதிப்புரை

தமிழகம் எவ்வாறு விரசாய்ப் போனது என்பதை உணர்ந்தால் தான், இதற்கு மாற்றுக் கண்டறிய முடியும். அந்த வகையில் நமது வீழ்ச்சிக்கு வித்திட்ட ‘சிறியார்’ ஒருவரை நாம் அனைவரும் அறிந்திருப்பது அவசியம். அந்த வகையில் நாம் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது. அம்பேத்கரிய ஆய்வாளர் திரு.ம.வெங்கடேசனால் ‘துக்ளக்’ வார இதழில் எழுதப்பட்டது தொடர் இப்போது சுவாசம் பதிப்பகத்தால் ‘மறைக்கப்படும் ஈ.வெ.ரா’ என்ற நூலாக வெளியாகி இருக்கிறது.

மோடியின் தமிழகம் – ஒரு கண்ணோட்டம்

‘மோடியின் தமிழகம்: உண்மை பேசுகிறது’ நூல் நமது தள வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானது தான். இந்நூல் குறித்த கண்ணோட்டத்தை இங்கு பதிவு செய்கிறார், தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...

மோடியின் தமிழகம் – நூல் அறிமுகம்

முன்னாள் பத்திரிகையாளரும் திரைப்பட இணை இயக்குநருமான திரு. சின்னப்பா கணேசன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் மோடி எதிர்ப்பு மாய பிம்பத்தை சுக்குநூறாக உடைக்கிறது. தமிழகத்திற்கு மோடி அளிக்கும் முக்கியத்துவத்தையும், தமிழின்பால் அவருக்குள்ள அன்பையும் பிரமாதமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். கவியரசு கண்ணதாசனின் எழுத்துநடையை ஒட்டிய சின்ன வாக்கியங்கள், சிறிய பத்திகள்; சுற்றி வளைக்காத சாதாரணமான எளிய உரையாடல் விளக்கங்கள்; பலரும் அறியாத முக்கியமான அடிப்படைத் தரவுகள்; படிக்கத் தூண்டும் சரித்திர நிகழ்வுகள்; நரேந்திர மோடியின் தமிழ் தொடர்பான மேற்கோள்கள் - இவை அனைத்தையும் பக்குவமாக இணைத்திருக்கும் பாங்கு என நல்ல அறுசுவை உணவு போலப் படைக்கப்பட்டிருகிறது இந்நூல்.

எனக்கு நிலா வேண்டும்- நூல் மதிப்புரை

குறிப்பிட்ட ஒரு துறையை மையமாகக் கொண்ட புதினம் எழுதுவது புதிய விஷயமல்ல. ஆனால் அந்தத் துறையில் மூழ்கி முத்தெடுப்பது என்பது ஒரு கலை. இதை மிக அற்புதமாகச் சாதித்திருக்கிறார் ஹிந்தி எழுத்தாளர் சுரேந்திர வர்மா.

வாழ்க்கையின் எதிர்பாராத சிக்கல்களையும், தான் சார்ந்த நாடகத் துறையின் பலம்- பலவீனங்கள், உள்ளரசியலையும், தனிமனித குணாதிசயங்களையும் ஒன்றாகக் கலக்கி, தெளிவான நீரோடை போன்ற கதையுடன் அவர் 1993-இல் படைத்த  ‘முஜே சாந்த் சாஹியே’ புதினம், ஹிந்தி எழுத்துலகில் பெரும் பரபரப்பை உருவாக்கியதுடன் முன்னுதாரணமான புதினமாகவும் மாறியது. 1996-இல் இதற்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது.

இப்புதினத்தை தடையற்ற தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எம்.சுசீலா.

முத்ரா ராட்சஸஸும், மேகதூதமும், சாகுந்தலமும் இந்தியக் கலையுலகின் அடிப்படை என்பதை இப்புதினத்தில் உணர்கிறோம். இதேபோல, தமிழின் காப்பிய வர்ணனைகளுடன் இயல்பான ஒரு தமிழ்ப் புதினம் உருவாக முடியுமா என்ற ஏக்கம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்: நூல் மதிப்புரை

மேற்கத்திய, மார்க்சீய தாக்கத்துடன் சரித்திரத்தைப் பார்க்கும் வரலாற்றாசிரியர்கள் திரிக்கும், மறைக்கும் வரலாற்றுப் பகுதிகளுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவது, வீர சாவர்க்கர் எழுதிய இந்த நூலின் தலையாய குறிக்கோள். முக்கியமாக – பாரதத்தின் /ஹிந்துக்களின் வரலாறு தோல்வியின் வரலாறு, பல நூற்றாண்டு அடிமைத்தனத்தின் வரலாறு என்ற தவறான கண்ணோட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. பாரத/ஹிந்து வரலாறு இடைவிடாத போராட்டத்தின் வரலாறு. நம் நாட்டின் அரசர்கள், மக்கள், வீரர்கள், தலைவர்கள், போராடி இன்றும் வெற்றி பெற்ற நாகரீகமாக வேத, ஹிந்து, பாரத நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் திகழச்செய்துள்ளார்கள் எனும் கருத்தை நூலாசிரியர் ஒவ்வொரு கட்டத்திலும் ஆழமாக பதியவைக்கிறார்.