29-01-1906 அன்று ‘சுதேசமித்திரன்’ இதழில் - "வேல்ஸ் இளவரசருக்குப் பரத கண்டத்தாய் நல்வரவு கூறுதல்" என்கிற பாரதியின் கீழ்க்கண்ட கவிதை பிரசுரமானது. இக்கவிதையில், அந்நியர் ஆட்சியில் இந்தியர் அடைந்த துயரங்களிலிருந்து நமது மக்களை ஆங்கிலேய ஆட்சி காத்த்து என்று குறிப்பிடும் பாரதி, அவர்களால் ஏற்பட்டுள்ள தொல்லைகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. எனினும் வேல்ஸ் இளவரசரை ‘அதிதி தேவோ பவ’ என்ற கருத்தாக்கத்துடன் வரவேற்று மகிழ்கிறார் மகாகவி பாரதி....
Tag: தனிப் பாடல்கள்
பாரதியின் தனிப்பாடல்- 23
காரைக்குடியில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து ‘ஹிந்து மதாபிமான சங்கம்’ அமைத்து தொண்டாற்றி வந்தனர். அவர்களது அழைப்பின் பேரில் காரைக்குடி சென்று இரு நாட்கள் தங்கியிருந்து, அங்கு 9.11.1919 இல் சொற்பொழிவு நிகழ்த்தினார் மகாகவி பாரதி. தற்போது நமக்குக் கிடைக்கும் பாரதியின் கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள், அப்போது அங்கு எடுக்கப்பட்டனவே. மகாகவி பாரதியின் முழு உருவத்தையும் புகைப்படத்தில் பதிவு செய்து பெருமை பெற்ர காரைக்குடி ‘ஹிந்து மதாபிமான சங்கம்’, பாரதியால் வாழ்த்துக் கவிதையும் பெற்று பெரும்பேறு அடைந்தது. அக்கவிதையே இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
பாரதியின் தனிப்பாடல்- 22
எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதிக்கு அந்த சமஸ்தான மன்னரான வெங்கடேசு ரெட்டப்ப பூபதியுடன் ஆரம்பகாலம் முதலே நல்ல தொடர்பு இருந்தது. தினசரி மன்னரின் கச்சேரியில் ஆஜராகி பத்திரிகை படித்துக் காட்டும் பணியை இளம் வயதில் பாரதி செய்திருக்கிறார். ஆயினும் அவரால், மன்னரின் அதிகாரத் தோரனையுடன் ஒன்றியிருக்க முடியவில்லை. அதனால் தான் ஆசிரியத் தொழிலை நாடி எட்டயபுரத்திலிருந்து அவர் வெளியேறினார். அது மட்டுமல்ல, மன்னரின் படாடோபம், அரண்மனையின் சில்லறை அரசியல், மன்னரின் அடிவருடிகளின் கேளிக்கைகள் ஆகிவற்றை வெறுத்த அவர், அதனை தனது வேடிக்கைக் கதைகளில் பூடகமாக புகுத்தி இருக்கிறார். எனினும் ஆங்கிலேய அரசால் வேட்டையாடப்பட்டு வறுமை சூழ்ந்த நிலையில், தனது குடும்ப நலனுக்காக, மன்னரிடம் உதவி கோரினார் பாரதி. அப்போது (1919) மகாகவி பாரதி எழுதிய விண்ணப்பக் கவிதையே இது... மன்னரிடம் உதவி கேட்கும்போதும்கூட, யாசகமாகக் கேளாமல், புவி ஆளும் மன்னரான எட்டயபுரம் ராஜா கவியரசனான தனக்கு உரிய கௌரவம் செய்ய வேண்டும் என்று கேட்கும் துணிவை இக்கவிதையின் நாம் காணலாம். இக்கவிதையில் இடம்பெற்றுள்ள ‘பொருள் புதிது’ என்ற மந்திரச் சொல்லே நமது தளத்தின் பெயராக அமைந்திருப்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
பாரதியின் தனிப்பாடல் – 21
தமிழன்னையின் சிறப்பணிகளான பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் கரையானுக்கு இரையாகாமல் காத்து, ஏடுகளைச் சரிபார்த்து செம்மையாக்கிப் பதிப்பித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். அவரது அளப்பரிய ஆற்றலால் தான் நமது தாய்மொழி செம்மொழி என்னும் பெருமையை நம்மால் தக்கவைக்க இயன்றது. அவர் மீது மகாகவி பாரதி பாடிய அற்புதமான வாழ்த்துப்பா இது.
பாரதியின் தனிப்பாடல் – 20
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் எட்டயபுரம் அரண்மனையின் அரசவையில் கர்நாடக இசைக் கலைஞராக இருந்தவர் சுப்பராம தீட்சிதர் (1839- 1906). இவர் தெலுங்கு மொழியில் எழுதிய ‘ஸங்கீத சம்பிரதாயப் பிரதர்ஷினி’ என்ற நூல் மிகவும் அரிய இசை நூல் எனப் பாராட்டப்படும் ஒரு இசைக்களஞ்சியம். இசை மும்மூர்த்திகள் எனப்படுபவர்களில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரின் இசைக் குடும்பத்தைச் சார்ந்தவர் இவர். எட்டயபுரம் அரண்மனையுடன் தொடர்பு கொண்டிருந்த மகாகவி பாரதி, இசையின் மீதும் பற்று மிகக் கொண்டவர். அவர் சுப்பராம தீட்சிதரின் இசைத்தொண்டை மிகவும் மதித்தவர். சுப்பராம தீட்சிதர் இறந்தபொழுது மனம் வருந்தி அவர் எழுதிய அஞ்சலிக் கவிதை இது...
பாரதியின் தனிப்பாடல்- 19
சென்ற நூற்றாண்டின் இணையற்ற ஓவியர் ராஜா ரவிவர்மா குறித்த மகாகவி பாரதியின் அஞ்சலிக் கவிதை இது...
பாரதியின் தனிப்பாடல்- 18
சுவாமி அபேதானந்தர் (1866 அக். 2 - 1939 செப். 8) ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். 1906 ஜூலை 15 ஆம் தேதி சுவாமி அபேதானந்தர் சென்னைக்கு வரவிருந்ததை அறிந்த பாரதியார், அதுகுறித்து தம் ’இந்தியா’ இதழில் எழுதியதுடன், சுவாமி அபேதானந்தரை வாழ்த்தி 32 வரிகளில் கவிதை படைத்தார். அக்கவிதையே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது....
பாரதியின் தனிப்பாடல்- 17
மகாகவி பாரதியின் ஆத்ம குரு சகோதரி நிவேதிதை. சுவாமி விவேகானந்தரின் பிரதம சிஷ்யையான நிவேதிதையையே தனது குருவாக வரித்துக் கொண்டவர் மகாகவி பாரதி. அவர் எழுதிய குரு வணக்கப் பாடல் இது....
பாரதியின் தனிப்பாடல்- 16
மகாகவி பாரதியின் தனிப் பாடல்களில் 16வது கவிதை, தாயுமானவர் மீதானது.
பாரதியின் தனிப்பாடல்- 15
மகாகை பாரதியின் தனிப்பாடல்களில் 15வது கவிதையான ‘சந்திரமதி’ காதலின் சிறந்த வெளிப்பாடு....
பாரதியின் தனிப்பாடல்- 14
இன்பமே இவ்வுலகம் என்பது போகியின் கட்சி. சிவநாட்டமே உலகம் என்பது யோகியின் கட்சி. இருவரும் வாதிடுகிறார்கள். சதுரங்கக் களத்தின் இருபுறமும் நின்று போகியாகவும் யோகியாகவும் மகாகவி பாரதியே கவித்துவமாக விளையாடுகிறார். இடையே நுழைகிறார் நடுவரான ஞானி. அதுவும் மகாகவி பாரதியே. இவ்வுலக இன்பங்கள் மாயையல்ல; அவையும் சிவனின் லீலைகள் என்கிறார். பிறகு மூவரும் இணைந்து இதனைப் பிரகடனம் செய்கிறார்கள். இந்த உலகம் மாயை என்பதை எக்காலத்திலும் பாரதி ஏற்கவில்லை. இந்தத் தத்துவத்தால்தான் நமது நாடு அடிமைப்பட்டது என்ற எண்ணம் அவருக்குண்டு. எனவேதான், வாய்ப்பு நேர்கையில் எல்லாம் மாயைச் சிந்தனையாளரை எள்ளியும், உலக இன்பங்கள் அனைத்தையும் வேண்டியும் கவிதை புனைகிறார் மகாகவி.
பாரதியின் தனிப்பாடல்- 13
மகாகவி பாரதி கவிதையின் ஊற்றாய்ப் பிறந்தவர். சென்ற கவிதையில் மனைவியாக கவிதையைக் கொண்டாடிய பாரதி, இக்கவிதையில் ‘மணிப்பெயர்க் காதலி’ என்று கொண்டாடுகிறார். ஆனால், இந்த மாய உலகில் வாழ்வதற்கான போராட்டத்தில் கவிதையாம் காதலியை மறந்தாக வேண்டி வருகிறது. வாழ்க்கைப்படகு தத்தளிக்கும் போது, சாபத்தால் பன்றியாக மாறிய முனிவரின் நிலை ஏற்பட்டு விடுகிறது என்று தன்னிரக்கத்துடன் முனிவரின் கதையை இக்கவிதையில் கூறுகிறார். அத்தகைய “அருந்தவப்பன்றி”யாக வாழ்ந்த சில நாட்களை இக்கவிதையின் வேதனையுடன் ஒப்பிடுகிறார் மகாகவி....
பாரதியின் தனிப்பாடல்- 12
“கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி” என்பது மகாகவி பாரதியின் வாக்கு. எனவேதான் கவிதையையே தனது மனைவிக்கு நிகராக அவரால் வைக்க முடிகிறது. இக்கவிதை, கவிதையின் மகாசக்தியை வியக்கிறது.
பாரதியின் தனிப்பாடல் – 11
”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று தொல்காப்பியம் கூறும். அந்தச் சொல் மந்திரமாக வேண்டும் என்பார் மகாகவி பாரதி. ”நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” -என்பதும் தொல்காப்பிய நூற்பா. ”நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்” - என்பார் திருவள்ளுவர். அதனையொட்டி, சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்” என்ற அறிமுகக் குறிப்புடன் இக்கவிதையை எழுதி இருக்கிறார் பாரதி. உள்ளத்தில் தூய்மையும் உறுதியும் பெருகும்போது வெளிப்படும் சொற்களும் மறைமொழியாகின்றன என்பதே இக்கவிதையின் உட்கிடக்கை....
பாரதியின் தனிப்பாடல்- 10
உலகெங்கும் ஒளீயெனத் திகழ்ந்தாலும், சிறு நெஞ்சத்தில் இருள் கவிகிறதே - என்று தன்னிரக்கம் எழ குமைந்து பாடுகிறார் மகாகவி பாரதி....