நாமக்கல்லார் பாடியபடி ‘கத்தியின்றி ரத்தமின்றி’ நடந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றி இது. இங்கு இந்த ‘கத்தியின்றி ரத்தமின்றி’ எனும் இந்தச் சொற்றொடரின் பொருள் வேறு. நம்மை ஆண்ட பிரிட்டிஷாரின் மீது கத்தி வீசாமலும், அவர்களது ரத்தத்தைச் சிந்தாமலும், நம்மை வருத்தி இந்திய தேசபக்தர்களின் ரத்தத்தின் மீது கட்டப்பட்ட சுதந்திர மாளிகை இது....
Tag: தஞ்சை வெ.கோபாலன்
ஸ்வதந்திர கர்ஜனை- 2(29)
1947 ஆகஸ்ட் 14-ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு தில்லி மாநகரில் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு இந்தியாவின் மூவண்ண சுதந்திரக் கொடி ஏற்றப்படுகிறது. அரசியல் சட்டம் இயற்ற அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை கூடுகிறது. தலைமைப் பீடத்தில் பாபு ராஜேந்திர பிரசாத். சரியாக 12 மணிக்கு ஜவஹர்லால் நேரு எழுந்து நாட்டு மக்களுக்கு ஓர் உரையாற்றுகிறார். மிகப் பிரபலமான அவரது உரையின் தமிழக்கத்தை இப்போது பார்ப்போம்....
ஸ்வதந்திர கர்ஜனை -2(28)
அசாம் பிரதேசத்தை வங்காளத்துடன் இணைக்க வற்புறுத்தி முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கையில் இறங்கியது. அப்போது அசாம் பிரதேசத்தை ஆண்டுவந்த லீக் அல்லாத கட்சியின் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது....
ஸ்வதந்திர கர்ஜனை – 2(27)
ஒரு கூட்டத்தில் மகாத்மா காந்தி சொன்னார் “நமக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்தவனுக்கு இரண்டு கிளாஸ் தண்ணீர் கொடுப்பதில் ஒன்றும் பெருமையில்லை; தீமை செய்தவனுக்கும் நன்மை செய்வதே அவனுக்குப் பெருமை. அதைத் தான் நான் விரும்புகிறேன்” என்றார் அவர்.
ஸ்வதந்திர கர்ஜனை- 2(26)
தற்காலிக இந்திய சர்க்கார் ஆசாத் ஹிந்த் 1943 அக்டோபர் 21-இல் துவக்கப்பட்டது. இப்படி இந்த இந்திய தற்காலிக சுதந்திர சர்க்கார் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதை சிங்கப்பூரிலுள்ள சாத்தே சினிமா கட்டடத்தில் கிழக்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் பிரகடனம் செய்யப்பட்டது. இதற்கான பிரகடனத்தில் இந்திய சுதந்திர சர்க்காரின் பிரதம மந்திரியாகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நேதாஜி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு கையெழுத்திட்டார்.....
ஸ்வதந்திர கர்ஜனை- 2(25)
“நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது ஆங்கில அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை”. -இப்படிச் சொன்னவர் பெருந்தலைவர் காமராஜ்.
ஸ்வதந்திர கர்ஜனை- 2(24)
அப்போது சிரித்துக் கொண்டே காசிராஜனும், ராஜகோபாலனும் நீதிபதியைப் பார்த்துக் கேட்டனர்: “ஐயா, நீதிபதி அவர்களே! எங்களுக்கு இருப்பதோ ஒரேயொரு ஜென்மம்தான். தாங்கள் அதைப் பறிக்கத் தூக்கு தண்டனை விதித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. அதற்கு மேல் மூன்று ஜென்ம தண்டனை விதித்திருக்கிறீர்களே, அதை நாங்கள் எப்போது அனுபவிக்க வேண்டும்? தூக்கு தண்டனை நிறைவேறிய பிறகா, அல்லது முன்பா?”
ஸ்வதந்திர கர்ஜனை- 2(23)
...இதில் சொல்லப்படும் முக்கிய கருத்து ‘காங்கிரஸ் கட்சி தடை செய்யப்படுமானால், காங்கிரஸ்காரர் ஒவ்வொருவரும் தமக்குத் தாமே வழிகாட்டியாகி முடிவுகளை எடுத்துச் செயல்பட வேண்டும்’. இந்த வாசகங்களிலிருந்து ஒவ்வொருவரும் ஊகித்துக் கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளம். அதன் விளைவுகள் தான் நாட்டில் பிரிட்டிஷாருக்கு எதிரான கடுமையான இறுதிப் போராட்டம்....
அன்பே சிவம்
தஞ்சையில் பாரதி இலக்கியப் பயிலரங்கை நடத்திவந்த அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் விவேகானந்தம் குறித்த இரண்டாவது கட்டுரை இது….
ஸ்வதந்திர கர்ஜனை- 2 (22)
கோவைப் பகுதியில் நடந்த நிகழ்ச்சிகளை சுருக்கமாகப் பார்த்தோம். இனி தஞ்சை மாவட்டத்தில் நடந்த இரு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். முதல் நிகழ்ச்சியில், திருவையாறிலுள்ள அரசர் கல்லூரியில் தொடங்கி அங்கிருந்த அரசு அலுவலகங்கள் தீக்கிரையான செய்திகளையும், தொடர்ந்து சீர்காழியில் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள உப்பனாற்றுப் பாலத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கையும் பார்க்கலாம்.
ஸ்வதந்திர கர்ஜனை- 2(21)
எங்கெங்கு பார்த்தாலும் ஊர்வலங்கள், கடையடைப்பு, பொதுக்கூட்டங்கள், போலீஸ் அடக்குமுறை. அஞ்சலகங்கள் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டன. தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டு தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டன. ஆங்காங்கே ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. இதெல்லாம் விளைவுகளை எண்ணி, இது சரியா தவறா என்று சிந்தித்துச் செய்யும் காரியங்களா என்ன? உணர்ச்சிவசப்பட்ட கூட்டத்தின் ஆவேசம் அப்படிப்பட்டது.
பாரத பூமி பார்க்கெலாம் திலகம்!
தஞ்சையில் பாரதி இலக்கியப் பயிலரங்கம் நடத்திவந்த மூத்த எழுத்தாளர் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் (1936- 2021) அவர்கள் சுவாமி விவேகானந்தரின் 150வ்து ஜெயந்தியின் போது எழுதிய கட்டுரை இது....
ஸ்வதந்திர கர்ஜனை- 2(20)
காந்திஜி தன்னுடைய உரையின் நிறைவில் மிக உருக்கமாக ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அது, “நான் ஒரு மந்திரத்தை உங்களுக்கு இப்போது சொல்லுகிறேன். அதை உங்கள் இதயங்களில் பதித்து வைத்திருங்கள். நீங்கள் விடும் மூச்சுக்காற்றிலும் இந்த மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கட்டும். அந்த மந்திரம் ‘செய்! அல்லது செத்து மடி!’ Do or Die” என்று குறிப்பிட்டார்...
ஸ்வதந்திர கர்ஜனை- 2(19)
1942-ஆம் ஆண்டு. ஆம்! நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னால், இந்தியாவை ஆணி அடித்தது போல நின்று நிதானித்து ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷார் இந்த நாட்டைவிட்டு பெட்டி படுக்கைகளுடன் புறப்பட வைக்கும் ஓர் இறுதிக்கட்டப் போராட்டம் தொடங்கப்படும் நேரம் நெருங்கிவிட்டது. அந்தப் போராட்டத்துக்குப் பச்சைக்கொடி காட்டப்போகும் காங்கிரஸ் மாநாடு, பம்பாய், ஆசாத் மைதானத்தில் 1942, ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி நடைபெற்றது....
ஸ்வதந்திர கர்ஜனை- 2(18)
ஜெர்மனியின் வெற்றி படிப்படியாகக் கிடைத்துக் கொண்டிருந்த நிலையில் 1941, ஜூன் மாதத்தில் ஜெர்மனி ரஷ்யாவின் மீது படையெடுத்துச் சென்றது. அதுவரை ரஷ்யா ஜெர்மனியோடு ஒரு யுத்தமில்லா அமைதி ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டிருந்தது. ரஷ்யா எதைச் செய்தாலும் ‘ஆமாம்’ சாமி போடும் இந்திய கம்யூனிஸ்டுகளும் இந்த யுத்தத்தை ஏகாதிபத்திய யுத்தம் என்று பறைசாற்றிக் கொண்டிருந்தனர். எந்த நேரத்தில் ஜெர்மனி ரஷ்யா மீது படையெடுத்துச் சென்று தாக்கத் தொடங்கியதோ அப்போது நமது இந்திய கம்யூனிஸ்டுகள் தாங்கள் பாடிவந்த ராகத்தை மாற்றி, யுத்தத்துக்கு “மக்கள் யுத்தம்” என்று செல்லப் பெயரிட்டு அழைக்கலாயினர். ரஷ்யாவின் எதிரியான ஜெர்மனி பிரிட்டனுக்கும் எதிரி என்பதால், ரஷ்யாவுடன் ஜெர்மனியை எதிர்க்கும் பிரிட்டனுக்கு கம்யூனிஸ்டுகள் யுத்த ஆதரவு பிரசாரம் செய்யத் தொடங்கினர்...