புதுமைக் கவிஞர் திரு. ஸ்ரீ.பக்தவத்சலம் எழுதிய மரபுக் கவிதை இது. மரபிலிருந்து கிளைப்பது தானே புதுமை?
Tag: காற்றிடைச் சாளரம்
காற்றிடைச் சாளரம்- 15
திருமுடி சூடிய மலரொன்று திருவடி பட்டுத் தெறித்தது. -கவித்துவம் தரிசனமாகும் இடம்....
காற்றிடைச் சாளரம் – 14
காற்றை ரசிக்கும் இளம் பாரதி இவர்....காற்றை இக்கவிதையில் கட்டிப் போட முயற்சிக்கிறார்.
காற்றிடைச் சாளரம் – 13
பிச்சையெடுத்தா பிண்டமிடுவது?- இந்தக் கடைசி வரிக் கேள்வியில் தான் இக்கவிதை தொக்கி நிற்கிறது...
காற்றிடைச் சாளரம் – 12
-கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம் கடவுளும் நானும் துயிலெழுந்தார்;உயிரெடுத்தேன். நீராடினார் ;மழையாடினேன். பசியடைந்தார்;பசியாறினேன். காமமெய்தினார்;கலவிபுரிந்தேன். சினந்தார்;சமரிட்டேன். விடைகளாயிருந்தார்;வினாக்களாயிருந்தேன். மௌனமானார்;தியானமானேன். அன்பிலலர்ந்தார்;இன்புறவடைந்தேன். நன்றி பெருக்கினார்;நாயுடன் இருந்தேன். லயித்திருந்தார்;கவிதைகளாக்கினேன். திருவுலாவினார்;தடம் தேடினேன். என்னையறிந்தார்;தன்னைக் கரைத்தேன். இனி என்ன? இடையிடையே நான் பயந்தும் துவண்டும் வாழ்ந்தபோதெல்லாம் அவரின் நிலையறியாமலேயே உடல் விடுவேன் – துயிலடைவார். $$$
காற்றிடைச் சாளரம் – 11
கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலத்தின் மன உருவகத்தில் வரையப்பட்ட மீன் இது...
காற்றிடைச் சாளரம்
உங்கள் வீட்டு குப்பைகளை என் வாசலில் கொட்டுகின்றீர்கள்; அதனை உரமாக்கிக்கொள்ளும் என் வீடு....
காற்றிடைச் சாளரம் – 9
கவிஞரின் எளிய கவிதை... அரிய பொருளுடன்...
காற்றிடைச் சாளரம்- 8
அழுக்குத் தலையணைக்கு வெளுத்த உறை- என்றால் என்னவென்று புரிகிறதா? இந்தக் கவிதைகளைப் படியுங்கள்... கவித்துவத்தில் கிறங்குங்கள்!
காற்றிடைச் சாளரம் – 7
நதியொரு சிற்பி
கூருடைத்த உருளைக் கற்கள்.
நதியொரு பாடகர்
விடியலுக்கு முன் கேளுங்கள்.
நதியொரு கலைஞன்
சும்மாயிருப்பதில்லை.
நதியொரு ஞான யோகி
தன்னியல்பில் தானானது.
காற்றிடைச் சாளரம் – 6
நீண்டு வளர்ந்த தும்பிக்கை நெளிய முறக்காது விசிறிவரும் யானைக்கு வால் மட்டும் பம்பரக் கயிறளவு. பெரிய மனிதர்க்கு சின்னப்புத்தியென வாலாட்டிச் சொல்லிவரும் யானை....
காற்றிடைச் சாளரம் – 5
மனம் என்னும் துணி- காற்றிடைச் சாளரத்தில் அலைபாய்கிறது இந்தக் கந்தல் துணி....
காற்றிடைச் சாளரம்- 4
கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம் எழுதியுள்ள சிறு கவிதை- பாரதியின் ‘அக்கினிக் குஞ்சு’ போல.
காற்றிடைச் சாளரம் -3
பயணிகளின்
கனிவான கவனத்திற்கு…
தயாராக இருக்கவும்.
தலையில் பறவையிடும் எச்சமாய்,
கிளையில் வந்தமரும் பறவையாய்,
கூட்டத்தில் வெடிக்கும் வன்முறையாய்,
வழியில் எதிர்ப்படும் கந்துக்காரனாய்,
உங்களுக்கான தடத்தில்
உங்களுக்கான வண்டி
எப்போதும் வரலாம்.
காற்றிடைச் சாளரம் -2
-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம் பிறந்த போதே தொப்புள் தழும்பு போல ஒட்டிக்கொண்டது காலம். . துயிலெழவும் துயில்கொள்ளவும் உணவுண்ணவும் கழிவு நீக்கவும் கற்றறியவும் கலை புரியவும் என ஒவ்வொன்றுக்கும் உடனிருந்தது காலம். . காலம் பார்த்து கல்வி காலம் பார்த்து காரியம் காலம் பார்த்து உணவு காலம் பார்த்து உறவு காலம் பார்த்து பிரிவு கலவியிலும் நுழையும் காலம். காலம்... காலம்... காலம். . பரமனின் கரத்திலொட்டிய பிரம்மனின் கபாலமாய் மனதிலொட்டிய காலத்தை சுமந்தலைகிறது வாழ்வு. . வேறு … Continue reading காற்றிடைச் சாளரம் -2