நினைவாலே சிலை செய்து…

‘அந்தமான் காதலி’ படத்தின் பாடல்கள் அன்று முதல் இன்று வரை, செவிக்கு இதமாகவும் மனதைப் பக்குவப்படுத்தும் மருந்தாகவும் இருக்கின்றன. காதலியைப் பிரிந்து அவள் நினைவாகவே வாடும் நாயகன் அவளை தனது இதயத்திலிருந்து ஒருநாளும் அகற்றவில்லை. அதன் அடையாளமாகவே, “நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்” என்று கூறும் நாயகன், தனது காதலியை  “திருக்கோயிலே ஓடி வா?” என்று அழைக்கிறான். எவ்வளவு இனிய உவமை! கவியரசரின் சிந்தையில் மலர்ந்த திரைக்கவிதை இன்று மட்டுமல்ல, என்றும் மணம் வீசும்.

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு!

சினிமா மூலமாக மக்களிடையே செல்வாக்குப் பெற்று தமிழக அரசியல் களத்தையே மாற்றியவர் திரு. எம்.ஜி.ஆர். அதற்கு அவரது திரைப்படங்களில் அமைந்த பாடல்களும் பெருமளவில் உதவியுள்ளன. அப்படிப்பட்ட ஒரு பாடல் இது. கவியரசரின் சிந்தனை வரிகள் ஒரு கதாநாயகனின் சொற்களாக அமைந்தபோது, அவர் மக்களின் தலைவன் ஆனது வியப்பில்லை தான்….

செந்தமிழ்த் தேன்மொழியாள்…

திரையுலகை ஆக்கிரமித்த திராவிட இயக்கத்தின் தொடக்கக் காலத்தில், அந்த இயக்கத்தின் இளம் நாற்றாக வெளிப்பட்ட கவியரசர் கண்ணதாசன் இயற்றிய அற்புதமான பாடல் இது. ‘மாலையிட்ட மங்கை’ (1958) என்ற இந்தத் திரைப்படமும், இந்தப் பாடலும் அக்காலத்தில் தமிழகமெங்கும் பிரபலமாகின. இத்திரைப்படத்தின் 15 பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டன. படத்தின் தயாரிப்பாளரும் அவரே. கவியரசரை தமிழகத்திற்கு முழுமையாக அறிமுகம் செய்வித்த திரைப்படம் இது எனில் மிகையில்லை.

புதியன பிறக்கட்டும்! (கவிதை)

இந்த ‘சோபகிருது’ புத்தாண்டு எல்லோருக்கும் முக்கனிச் சுவை போல இனிதாகட்டும்! கவியரசரின் புத்தாண்டு வாழ்த்துடன் இந்த ஆண்டு இனிதே தொடங்கட்டும்!!

உலகம் பிறந்தது எனக்காக!

உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் இப்படத்தின் நாயகன்; சிறுவயதில் அறியாமல் செய்த தவறால் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டவன்; விடுதலையாகி, ஆதரவற்றவனாக வெளிவரும்போது, சிறைப்பட்ட பறவையின் விடுதலை உணர்வுடன் அவன் பாடும் பாடல் இது. பாசத்துக்கு ஏங்கும் தவிப்பையும், உலகை ரசிக்கத் தயாராகும் துடிப்பையும், ‘உலகம் பிறந்தது எனக்காக’ என்ற முதல் வரியிலேயே சொல்கிறான். திரைப்படத்துக்கேற்ற காவிய வரிகளை வார்த்திருக்கிறார் கவியரசர்...

ராமன்… எத்தனை ராமனடி?

இங்கே திரைப்பாடலில் ராமனை எப்படி வர்ணிக்கிறார் கவியரசர் என்று பாருங்கள். இதுதான், நாட்டின் நாடியுணர்ந்த எழுத்தாளனின் கடமை. திரைக்கலையும் பண்பாட்டுப் பெருவெளியுடன் உறவு கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கவிஞரின் தாபம் இப்பாடலில் இழையோடுகிறது. இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம்: லட்சுமி கல்யாணம்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…

திரைக்கதையையே கவிதையாக்கி, சோககீதம் இசைக்கிறார் கவியரசர். நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் பார்த்தவர்களுக்கு இந்தத் திரைக்கவிதையின் பரிமாணம் புரியும்.

மயக்கமா, கலக்கமா?

‘சுமைதாங்கி’ திரைப்படத்தில் இடம்பெற்ற கவியரசரின் இப்பாடல், காலத்தை வென்று ரீங்கரிக்கும் இனிய தத்துவப் பாடல்;  வாழ்வில் கலக்கம் சூழும் தருணங்களில் மனம் தெளிவு பெறக் கேட்க வேண்டிய அற்புதமான திரைப்பாடல்….

மருதமலை மாமணியே முருகய்யா!

அனைவருக்கும் இனிய தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள். தைப்பூச சிறப்புப் பதிவாக கவியரசர் தெய்வீகப் பாடல் இங்கே....

தீபம் போதும்! (கவிதை)

மகாத்மா காந்திக்கு கவியரசரின் அஞ்சலிக் கவிதை இது...(இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்)

தாயகச் செல்வன் (கவிதை)

திரு. கவியரசு கண்ணதாசன் (1927- 1981), மகாகவி பாரதிக்குப் பிறகு வந்த, உத்வேகமூட்டும் தமிழ்க் கவிஞர்; திரைப்பாடல்களுக்கு இலக்கிய மரியாதையை ஏற்படுத்தியவர். சுவாமி விவேகானந்தர் மீதான கவியரசரின் இனிய கவிதை இது…

பாட்டும் நானே… பாவமும் நானே!

ஆணவம் கொண்ட பாடகர் ஒருவருக்கு பாடம் கற்பிக்க, விறகுவெட்டியாய் வந்து பாடி திருவிளையாடல் நிகழ்த்திய சிவனின் பெருமையை உணர்த்தும் பாடல் இது... திரைக்கதைக்கு ஏற்ப கவியரசர் நிகழ்த்தியுள்ள சொற்களின் ஜாலம், திரைப்படத்தின் தரத்தையே உயர்த்துகிறது...

காற்றுக்கென்ன வேலி?

இந்த உலகம் ஆண்- பெண் சேர்க்கையால் தான் வாழ்கிறது. உலகின் நியதியில் இருவரும் சமம். ஆனால், இயல்பில் ஆண் ஆதிக்கமே பெண்னுரிமை பேசும் நாடுகளிலும் கூடத் தொடர்கிறது. இந்த ஆதிக்கத்தை ஏற்காத சமத்துவத்துக்கான குரல்கள், மகாகவி பாரதி முதல் கவியரசு கண்ணதாசன் வரை- ஆண்களாலேயே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு ஓர் அரிய மாதிரிப் பாடல் தான் இங்கே பதிவாகிறது. 1977-இல்வெளியான ‘அவர்கள்’ (இயக்கம்: கே.பாலசந்தர்), ஆணுக்கும் பெண்ணுக்குமான அன்பின் ஆழத்தை புதிய நாற்கோணத்தில் காட்ட முயன்ற திரைப்படம். விவாகரத்து கொடுத்துவிட்ட சந்தேகப் பிராணியான கணவன், விதிவசத்தால் வாழ்வில் இணைய முடியாத முன்னாள் காதலன், தன்னை மிகவும் நேசிக்கும் மனைவியை இழந்த இளைஞன் ஆகியோர் ஓர் இளம்பெண்ணின் வாழ்வில் குறுக்கிடுகிறார்கள். அவர்களில் யாரைத் தேர்வு செய்கிறாள் அவள்? மீண்டும் அவளது பயணம் யாருடன்? இவர்கள் மூவரையும் ஒதுக்கி, தனிப் பயணம் தொடங்கும் புரட்சிகர மாது இவள்… மகனுடனான உறவை அறுத்து உடன் செல்கிறாள் இவளது முன்னாள் கணவனின் அன்னை. இவர்களது எல்லைகளை சுயநல ஆண்களால் வரையறுக்க இயலாது…

அறுபடை வீடு கொண்ட திருமுருகா!

தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளையும் வர்ணித்து கவியரசர் எழுதிய இப்பாடல், ‘கந்தன் கருணை’ திரைப்படத்தில் வெண்கலக் குரலோனின் இனிய பாடலாக முகிழ்த்தது...

மாலைப் பொழுதின் மயக்கத்திலே…

குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் விதவையின் மன ஏக்கங்களை அற்புதமான வரிகளில் இப்பாடலாக இழைத்திருக்கிறார் கவியரசர். “இளமை எல்லாம் வெறும் கனவு மயம்...  இதில் மறைந்தது சில காலம்! தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்” என்ற வரிகளில் தான் எத்தனை வேதனை?