திரையுலகம்: மாறுகிறது நெஞ்சம்… மாற்றுவது யாரோ?

இடதுசாரிகள், ஹவாலா கும்பல்கள், லிபரல்களால் கைப்பற்றப்பட்ட இந்திய சினிமாவும், திராவிட, நாத்திகக் கும்பல்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்த் திரையுலகும் மீட்சி பெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன என்கிறார், தமிழ்த் திரைப்பட உதவி இயக்குநர் திரு. சின்னப்பா கணேசன். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தையும் அதையொட்டி வெளியான சில படங்களையும் முன்வைத்து, இந்த அவதானிப்பை இவர் முன்வைக்கிறார்….

ஞாயிறு போற்றுதும்:  மோதேரா சூரியன் கோயில்

சௌராஷ்டிராவை (குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதி) ஆண்ட (சாளுக்கிய) சோலங்கி வம்ச மன்னர் முதலாம் பீமதேவனால் மோதேரா நகரத்தில், பொ.யு. 1026 இல் கட்டி முடிக்கப்பட்டு, சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.... 7 குதிரைகள் இழுத்துச்செல்லும் தேரின் மீது தனது மனைவியர் சஞ்சனா, சாயா சூழ நின்று காட்சியளிக்கும்  சூரிய தேவன் சிற்பங்களின் எழிலில் நம் மனம் லயித்து விடுகிறது.

தமிழ் சினிமாவின் தடுமாற்றம்

தமிழ்த் திரையுலகில் ஏதோ ஒரு நாசசக்தி புகுந்துவிட்டது அப்பட்டமாகத் தெரிகிறது. ஒருகாலத்தில் உச்சத்தில் இருந்த தமிழ் சினிமா தற்போது, பிரிவினைவாதம், அரசு எதிர்ப்பு என்ற பெயரில் இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு எனத் தடம் புரண்டு விட்டது. இதன் பின்னணி என்ன? அத்துறையிலேயே தனது இருப்பை நிலைநாட்டப் போராடிக் கொண்டிருக்கும் உதவி இயக்குநரான திரு. சின்னப்பா கணேசன் காரணங்களை அலசுகிறார்….

காந்தாரா: வனக் கடவுளின் முழக்கம்

அண்டை மாநிலத்தில் கன்னடத்தில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், மிகக் குறுகிய நாட்களில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பாராட்டப்பட்டு பேசுபொருளாகி இருக்கிறது. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பது போல, எந்த விளம்பரமும் இல்லாமலே, அதீத ஊடக வெளிச்சம் இல்லாமலே, இதைச் சாதித்திருக்கிறது, ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காந்தாரா’. தமிழ்த் திரையுலகின் ‘புள்ளிங்கோ’க்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்; பொன்னியின் செல்வன் எடுப்பதற்கு முன் இயக்குநர் மணிரத்னம் பார்த்திருக்க வேண்டிய திரைப்படம் இது. சமகாலத் திரையுலகில் ஒரு பெரும் திசைமாற்றத்தை வெளிப்படுத்தும் கருவியாக உள்ளதால், இப்படம் குறித்த விமர்சனங்கள் இங்கு வெளியாகின்றன.

பொழில்வாய்ச்சியின் எழில் கோயில்

சிற்பக்கலை ஆர்வலரும், கானுயிர் புகைப்படக் கலைஞருமான, பொள்ளாச்சியைச் சார்ந்த திரு. மது.ஜெகதீஷ், கணினிப் பொறியாளரும் கூட. நாடு முழுவதும் உள்ள தொன்மையான ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களை புகைப்படத்தில் பதிவு செய்யும் அரும்பணி ஆற்றிவரும் இவரது சிற்பக் கட்டுரை இங்கே....