'நான் சுட்டுத் தாரேன், நீ பெற்றுத் தா' என்று மாமியார் சீமந்தம் காணும் தன் மருமகள் சேலை முந்தானையில் பொதிந்து கொடுத்து பிறந்தகம் அனுப்புவாரே, அமிர்த கலசம், அதுவாவது நமக்கு ஞாபகம் இருக்கிறதா?
Tag: எஸ்.எஸ்.மகாதேவன்
வெண்ணெய் கைவசம் இருக்க நெய் தேடி அலையலாமா?
மூத்த தமிழ் இதழாளர் திரு. எஸ்.எஸ்.மகாதேவன், இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை மேம்படுத்துவது எப்படி என்று இக்கட்டுரையில் ஆராய்கிறார்....
கடல் – கண்ணிகள்
‘இதுவரை அச்சேறாத பாரதியார் கவிதை’ என்று குறிப்பிட்டு 1966 தினமணி ஞாயிறு மலர் ஒன்றில் ‘கடல் – கண்ணிகள்’ என்ற தலைப்பில் வெளியான கவிதை - மனிதனும் கடலும் உரையாடுவதாக அமைந்த 44 வரி படைப்பு இது.
எனது முற்றத்தில்- 30
ஒரு சிறிய வட்டார விவசாயிகளின் ஹிந்து சமயச் சடங்கு இந்த அளவுக்கு பிரம்மாண்டமான திருவிழாவாக வடிவெடுத்து அபாரமான வணிக வாய்ப்புக்கு வகை செய்திருப்பதை பெங்களூர் எம்.பி.யும் பாஜகவின் அகில பாரத இளைஞர் அணித் தலைவருமான தேஜஸ்வி சூர்யா சுட்டிக்காட்டி, “லோக்கல் டு குளோபல் என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்லி வரும் கருத்துக்கு நேரடி உதாரணம் இது” என்று தனது ட்விட்டர் பதிவில் பாராட்டினார்...
எனது முற்றத்தில் – 29
தேசத்தின் கலாச்சார பாரம்பரிய அடிப்படையில் மொழிகளிடையே சுமுக உறவு ஏற்படுத்தி,கழகங்கள் உருவாக்கி வைத்திருக்கிற மொழித் துவேஷத்தை துடைத்து அழிப்பதற்கு முயற்சி தொடங்கிவிட்டது. விளையாட்டு, பாட்டு, பழமொழி, கதை, உரையாடல் என்று நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியிலிருந்து உதயமாகி வியாபிப்பது நல்ல அறிகுறி.
எனது முற்றத்தில் – 28
தென்கோடி எட்டயபுரத்தில் இருந்து காசி மாநகரம் சென்று கல்வி பயின்ற பாரதியாருக்கு 11 மொழிகள் தெரிந்திருந்தது. ஆனால் அவர் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது, தமிழ்க் கவிஞராக. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தன் தாய்மொழிப் பற்றை அழுத்தம் திருத்தமாக அவர் பிரகடனம் செய்தது ஒருபுறம்; மறுபுறம் “காசி நகர்ப்புலவர் பேசு மொழிதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்ற பாரதியின் இன்னொரு வரி, காசியின் ஞானமேன்மையை நமக்கு நினைவூட்டுகிறது.
எனது முற்றத்தில்- 27
தெய்வ நம்பிக்கை உள்ள ஹிந்து ஒன்றும் பொதுவாக பணத்துக்குப் பறப்பவன் அல்ல. அவனுடைய கலாச்சாரம் அவனுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது, ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்று. செல்வத்திற்குப் பெயரே ஐஸ்வர்யம் (ஈஸ்வர சம்பந்தம் உள்ளது). பேரறிஞர் தீனதயாள் உபாத்யாய குறிப்பிடுவாரே, “சத ஹஸ்தம் ஸமாஹர, சஹஸ்ர ஹஸ்தம் வீக்கிற” என்ற உபநிடத வாக்கியத்தை, அதன் பொருள்தான் என்ன? நூறு கரங்களால் விளைவி, ஆயிரம் கரங்களுக்கு வழங்கு என்பதுதானே?
டானா கம்பியும் பொட்டு வெடியும்
எழுதத் தொடங்கியது பொட்டுவெடி தான்; ஆனால், முடியும்போது வாணவேடிக்கை காட்டுகிறார் மூத்த பத்திரிகையாளர் திரு. எஸ்.எஸ்.மகாதேவன். வண்ணங்களின் சிதறலாக, எண்ணங்களின் குவியல்களை நம் முன் காட்சிப்படுத்தி இருக்கிறார் இக்கட்டுரையில்...
எனது முற்றத்தில்- 25
இதை வாசிக்கும்போதே, 'கோயில் வாசல் பிரசாத விநியோக விஷயத்தில் மட்டுமல்ல, பொதுவாகவே ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுக்கோப்பு நிலவினால் எப்படி இருக்கும்!' என்று உங்கள் மனதில் கற்பனை அரும்பாமல் இருந்தால் தான் ஆச்சரியம். ஒழுங்கும் கட்டுப்பாடும் எல்லோருக்கும் வேண்டியிருக்கிறது. யாராவது ஒருத்தர் வந்து அதில் பயிற்சி கொடுக்க வேண்டியிருப்பது இன்றைய நிலை. சமுதாயம் சதா சுயமாக ஒருங்கிணைந்து இயங்கும் பொற்காலம் வராமலா போகப் போகிறது?
எனது முற்றத்தில்- 24
தாம்பரம் வர்த்தக பிரமுகர், தேசியவாதி மீனாட்சிசுந்தரம் பல ஆண்டுகளுக்கு முன், அரவிந்தரைப் பற்றி பேசுங்கள் என்று என்னைக் கேட்டுக் கொண்டபோது எனக்கு தூக்கிவாரிப் போட்டது. காரணம், நான் பேச வேண்டிய இடம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம். அங்கு வள்ளல் கருணாநிதி செட்டியார் உபயத்தால் வருடாந்தர ஸ்ரீ அரவிந்தர் நினைவுச் சொற்பொழிவு நடக்கும். அதில்தான் அந்த ஆண்டு நான் போய் பேச வேண்டியிருந்தது. மொட்டை மாடியில் சிறுவர்களை உட்கார வைத்து அரவிந்தர் பற்றி கதை சொல்லலாம். ஒரு பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்றுவது என்றால், உதறலுக்குக் கேட்கவா வேண்டும்?
எனது முற்றத்தில் – 23
ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய இரண்டையும் ஹிந்தியில் மொழிபெயர்த்த திருச்சி பிளஸ் டூ மாணவி அப்சராவை சில வாரங்களுக்கு முன் ஆளுநர் அடையாளம் கண்டு, குடும்பத்துடன் ராஜ்பவன் வரவழைத்துப் பாராட்டியிருக்கிறார். தமிழில் உள்ள ஞானம் ஹிந்தி வாயிலாக நாடெங்கும் பரவ அந்த மொழிபெயர்ப்பு கருவி ஆயிற்று என்பதுதான் ஆளுநருக்கு உவப்பு அளித்திருக்கிறது....
எனது முற்றத்தில்- 22
என் மதிப்புக்குரிய நண்பர் பி.எஸ்.என்.மல்லையா பற்றிப் பார்ப்போம். வங்கி அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் மல்லையா. சங்கப் பெரியவர்கள் சொல்லியதன் பேரில் 1948-இல் தொடங்கிய ‘விக்ரமா’ வார இதழின் ஆசிரியராக 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டார். இவரை காங்கிரஸ் கட்சி வளைத்துப் போட்டுக்கொள்ள குறி பார்த்தது. இவருடைய பணிக்காலம் நெடுக கர்நாடகாவின் நாலைந்து காங்கிரஸ் முதலமைச்சர்கள் உள்பட அனைவருடனும் நெருங்கிப் பழகியவர். ஆனால் காங்கிரசின் அழைப்புக்கு ஒரு ‘நமஸ்தே’ போட்டுவிட்டு தொடர்ந்து ஹிந்துத்துவ இதழியலில் காலுறைத்து நின்றார். ..
எனது முற்றத்தில்- 21
சுயநலமே இல்லாமல் மற்றவர்களின் துயர் துடைக்கும் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டால் சித்த சுத்தி வாய்க்கும் என்பார் காஞ்சி மஹாசுவாமிகள். சித்த சுத்தியால் தெய்வ தரிசனம் கைகூடும் என்றும் மகான்கள் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அனைவருக்குமான ஆன்மிக ராஜபாட்டை இதுதான். அதில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள் அவரவர் கர்மவினைப் பலனுக்கு ஏற்ப உயரங்களை அடைகிறார்கள் என்பது அனுபவபூர்வமான ஹிந்துத்துவ ஞானம்....
எனது முற்றத்தில்- 20
அந்த வழியே நடைபயிற்சிக்கு சென்று கொண்டிருந்த ’துக்ளக்’ ஆசிரியர் சோ ராமசாமி தாமாக அந்த வகுப்பில் பிரவேசித்தார். வகுப்பில் இருந்த 200 பேர் முகத்திலும் ஒரு மலர்ச்சி. "மம நாம ஸ்ரீராம், பவதஹ நாம கிம்?" என்று சோவை நோக்கியும் ஸ்ரீராமன் தன் அஸ்திரத்தை ஏவினார். லாகவமாக அதைக் கையாண்ட சோ, "மம நாம ஏகாக்ஷரம்!" (என் பெயர் ஓர் எழுத்து) என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.....
எனது முற்றத்தில்- 19
ஸ்ரீ குருஜி கோல்வல்கர் நூற்றாண்டு 2006இல் வந்தது. அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள், கட்டுரைகள், பேட்டிகளின் பதிவுகள் 'ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் 12 தொகுதிகளாக வெளியாகின. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து நிறைய பெரியோர்கள் வந்து இதற்காகவே சென்னையில் தங்கி பதிப்புப் பணியை நிறைவேற்றிக் கொடுத்தார்கள் என்பதால் என் மனதில் மலைப்பே தோன்றவில்லை. தொகுதிகளின் பல்வேறு கட்டுரைகளின் நடையை செப்பம் செய்து கொடுத்த இருவர் தற்போது இரண்டு மாநிலங்களின் ஆளுநர்கள் என்பது சுவாரஸ்யமான தகவல். ....