அழகிய போராட்டம் (பகுதி- 8)

ஒத்துழையாமையும் சட்டமறுப்பும், ஜனநாயகமும் சுதந்தர நாடும் நன்கு செயல்பட உதவும் விஷயங்களே. இன்னும் சொல்லப்போனால் அவை இறுக்கமான சட்ட அமைப்புகளைவிட மிகவும் முக்கியமானவை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாநில அல்லது நாடாளுமன்றத் தேர்தல்கள் அல்லது இப்படியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளுக்குள் நடக்கும் மட்டுப்பட்ட விவாதங்கள், பரிசீலனைகள் ஆகியவற்றைவிட அமைதிப் போராட்டங்கள் மிகவும் அவசியமானவையே. சர்வாதிகாரம், அநீதி, அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக இப்படியான அமைதிப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் அனைவரும் உண்மையில் அரசையும் மக்கள் சமூகங்களையும் காப்பாற்றக் கூடியவர்களே. அவர்கள் மட்டும் இல்லையென்றால், சமூகமானது வெறும் இயதிரம் போன்ற ஒன்றாகவே முடங்கிப் போகும். அல்லது சர்வாதிகாரப் போக்கினால் முழுமையான அராஜகம் மற்றும் ஆயுதப் போராட்டம் போல முடியும்.... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் அத்தியாயம் 4-இன் நிறைவுப் பகுதி)....

அழகிய போராட்டம் (பகுதி- 7)

தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஒத்துழையாமை,  சட்ட மறுப்பு போன்ற அமைதியான வழிகளில் போராடுவது என்பது இந்தியப் பாரம்பரியத்தின்  ஓர் அங்கமாக இருந்திருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.  ....“இந்திய தேசம் முழுவதிலும் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும்  அமைதி வழியிலான எதிர்ப்பைக் காட்டுவது தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது.   நமது ஆட்சியாளர்கள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினால் நாம் அவர்களுடன் ஒத்துழைக்க மறுப்பது உண்டு” என்ற காந்திஜியின் கூற்றையும் அது உறுதிப்படுத்துகிறது.  (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் 4வது அத்தியாயத்தின் துவக்கப் பகுதி)...

அழகிய போராட்டம் (பகுதி- 6)

பகுதிகளிலும் நடந்ததாகத் தெரியவரும்  போராட்டங்கள் எல்லாம் 1920-  1930களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கச் செயல்பாடுகளைப் போலவே  இருப்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். 1810-11 வாக்கில் பனாரஸிலும் பிற பகுதிகளிலும் நடந்த விஷயங்களை சுருக்கமாக இங்கு மறு பார்வை பார்ப்பது மிகவும் அவசியமாக இருக்கும்.... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் மூன்றாவது அத்தியாயம்...)

அழகிய போராட்டம் (பகுதி- 5)

“30 செப்டம்பர், முந்தா நாள் திங்கட்கிழமையாக இருந்ததால் வரி வசூலிப்பு ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் தாசில்தாரின் வருகையைக் கண்டதுமே மக்கள் தமது கடைகளையும் வீடுகளையும் மூடிக் கொண்டுவிட்டனர். நேற்றும் அரசாங்க அதிகாரிகளினால் எதுவும் செய்யமுடியவில்லை. மாலையில் நான் வண்டியில் வெளியே போனபோது சாலையில் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆனால், தங்களுடைய நிராதரவான நிலைமை குறித்து புகார் மழை பொழிந்தனர். வரியைச் செலுத்த முடியாது என்று கூச்சலிட்டுச் சொன்னார்கள்.”... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் அத்தியாயம்- 2இன் தொடர்ச்சி)....

அழகிய போராட்டம் (பகுதி- 4)

பொதுவாக நம்பப்பட்டு வருவதற்கு மாறாக, 1784  வாக்கிலிருந்து (அதற்கு முன் இல்லை என்று வைத்துக்கொண்டாலும்)  இந்தியா தொடர்பாக இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரிய பங்கு எதுவுமே இருக்கவில்லை.  தீர்மானங்கள் மட்டுமல்ல, பல நேரங்களில் ஆரம்பகட்ட செயல்திட்ட வரைவுகள் கூட 1784களுக்குப்  பின்னர் இந்திய விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளும் கமிஷனர்கள் குழுவிடம்  தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது.  அந்தக் குழுவானது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்  ஒரு சட்டம் மூலமாக உருவாக்கப்பட்டிருந்தது.  பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உறுப்பினர்கள்தான்  அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். 1858  வரையிலும் அந்தக் குழுவே இந்தியா தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் எடுத்தது. ... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் துவக்கப் பகுதியில் இருந்து)....

அழகிய போராட்டம் (பகுதி- 3)

காந்தியால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டமானது முதலில் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டது. அதன்பின் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டது. ஒரு சிலருடைய கூற்றின்படி காந்தியடிகள் அந்த அகிம்சைப் போராட்டத்தை தொரேயூ, டால்ஸ்டாய், ரஷ்கின் போன்றோரிடம் இருந்தே கற்றுக் கொண்டிருக்கிறார். வேறுசிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், ஒத்துழையாமை இயக்கமும் சட்டமறுப்பு இயக்கமும் காந்தியடிகளின் மகத்தான சுயமான கண்டுபிடிப்பு. அவருடைய மேதமையினாலும் ஆன்மிக உயர் சிந்தனையினாலும் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்....நவீனகால ஒத்துழையாமை இயக்கங்களில் வன்முறை வெடிக்கின்றன. அதை ஒடுக்குவதற்கு அரசும் மிகப் பெரிய வன்முறையில் ஈடுபடுகிறது. ...கலகக்காரர்களாலோ போராட்டக்காரர்களோ செய்யப்பட்ட வன்முறையைவிட அரசின் வன்முறையே மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. அழகிய போராட்டம்- பகுதி 3இல்...

அழகிய போராட்டம் (பகுதி- 2)

சுதந்திரம் கிடைத்ததைத் தொடர்ந்து சில காலம் நீடித்த பெருமித மயக்கங்களைத் தொடர்ந்து தன்னைத் தானே இழிவுபடுத்திக்கொள்ளும் சுய இழிவு மனப்பான்மை ஆரம்பமானது. குறிப்பாக மேற்குலகக் கல்வி பெற்றவர்கள் இந்தப் போக்கை முன்னெடுத்துச் சென்றனர். நவீனமயமாக்கம், அறிவியல் சிந்தனை என ஏதாவது ஒரு வழியில் இந்திய அடையாளங்கள், அம்சங்கள் ஆகியவற்றை ஓரங்கட்டினர். இந்தப் போக்கு இன்றும் முடிவுக்கு வந்துவிடவில்லை. இந்திய சமுதாயத்தில் அல்லது வரலாற்றில் இருந்த தவறுகள், தீமைகள் - இவற்றை நாம் மூடி மறைத்துவிட வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் மாரில் அடித்துக்கொண்டு அழுதல், தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்ளுதல் போன்றவையெல்லாம் தேச நிர்மாணத்துக்குத் தேவையான மன உறுதியை, உந்துதலை ஒருபோதும் தரப் போவதில்லை. அடிமைத்தனமாக அந்நியர்களை நகலெடுப்பதும் எந்த வகையிலும் நமக்கு உதவப் போவதில்லை....

அழகிய போராட்டம் (பகுதி- 1)

இந்திய மூல சிந்தனையாளரும் வரலாற்று ஆராய்ச்சியாளருமான ஸ்ரீ. தரம்பாலின் நூற்றாண்டு இது. நம்மிடையே வாழ்ந்து மறைந்த கடைசி காந்திய சிந்தனையாளர் இவர்....ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகே பாரதத்தில் கல்வி, அறிவியல், தொழில் வளர்ச்சி சாத்தியமானது என்ற கண்மூடித்தனமான வாதங்களுக்கு சரியான பதிலடி கொடுப்பவை தரம்பாலின் நூல்கள். பாரதத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்த அறிவியக்கத்தை அறுத்தெறிந்ததே ஆங்கிலேயரின் சாதனை என்பது தரம்பாலின் ஆய்வு முடிவு.... இங்கு தொடராக வெளியாக உள்ள  ‘அழகிய போராட்டம்’, இதுவரை தமிழில் வெளிவராத நூல். தரம்பாலின் Civil Disobedience and Indian Tradition (1971) நூலே இங்கு திரு. பி.ஆர்.மகாதேவனால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.