குறிப்புகள்

சக்திதாஸன் என்ற பெயரில் சுதேசமித்திரனில் மகாகவி பாரதி எழுதிய வியாசம் இது. ஸம்ஸ்க்ருதம் குறித்த பாரதியின் கருத்து மிகத் தெளிவானது. அதுவே இந்தியாவுக்கான பொது பாஷை என்பது தான் மகாகவியின் கருத்து என்பதை இந்தப் பதிவில் காண்கிறோம்…

காலக் கண்ணாடி

“இந்தியாவிலுள்ள பத்திரிகைகள் ஐரோப்பிய, அமெரிக்கப் பத்திரிகைகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள. விஸ்தாரமான செய்தி யெல்லை; ரஸமாகச் செல்லும் திறமை – இவற்றில் இந்தியாவிலுள்ள பத்திரிகைகளைக் காட்டிலும் மேற்றிசைப் பத்திரிகைகள் மிக உயர்ந்த நிலையிலிருக்கின்றன. அதிலும், இந்தியாவிலுள்ள தேசபாஷைப் பத்திரிகைகளின் நிலைமை சில அம்சங்களில் மிகவும் பரிதாபத்துக்கிடமாக இருக்கிறது” - மகாகவி பாரதி

இதன் பெயரென்ன?

லண்டனிலிருந்து வெளியாகும் ‘டைம்ஸ்’ பத்திரிகை இந்திய விரோதமாக எழுதுவது இன்று ஏதோ புதியதல்ல, மகாகவி பாரதி காலத்திலேயே இப்படித்தான் அந்தப் பத்திரிகை செயல்பட்டிருக்கிறது. அதற்கு அப்போதே பதிலடி கொடுத்திருக்கிறார் மகாகவி...

வெறும் வேடிக்கை

ஆரிய- திராவிட இன வேற்றுமை என்ற பொய்க்கதையை கிறிஸ்தவப் பாதிரிகள் பரப்ப ஆரம்பித்த தொடக்க காலத்திலேயே அதைக் கண்டித்திருக்கிறார் மகாகவி பாரதி. இந்தியாவில் உள்ள ஜாதி பேதத்துக்கு பிராமணர்களைக் காரணமாக பிரசாரம் செய்து, பிராமணர்களுக்கும் பிற ஜாதியினருக்கும் பகையை ஏற்படுத்தும் கிறிஸ்தவ சதியை 1920-இல் எழுதிய தமது கட்டுரையில் அம்பலப்படுத்தி இருக்கிறார் இதழாளர் பாரதி... இன்றும் இதுதானே நிலைமை?

தமிழ்நாடே சரியான களம் (தமிழ் நாட்டின் விழிப்பு)

“உலகத்து மனிதர்களெல்லோரும் ஒரே ஜாதி. ‘இந்தச் சண்டையில் இத்தனை ஐரோப்பியர் அநியாயமாக மடிகிறார்களே’ யென்பதை நினைத்து நான் கண்ணீர் சிந்தியதுண்டு. இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன், அப்படியிருந்தும் ஐரோப்பியர் மடிவதில் எனக்குச் சம்மதம் கிடையாது. எல்லா மனிதரும் ஒரே வகுப்பு” - ஆஹா, என்னே, மகாகவி பாரதியின் உலகநேய சிந்தனை!

தொழில்

தொழில் சிறப்பு குறித்த சான்றோரின் மேற்கோள்களை முதல் பகுதியில் குறிப்பிட்டு, அதற்கு இரண்டாம் பகுதியில் விளக்கம் அளிக்கிறார் காளிதாஸன் (எ) மகாகவி பாரதி. “முயற்சி யிருந்தால் பயமில்லை.  முயற்சி யுண்டானால் வெற்றியுண்டு. முயற்சி உடையவனுக்கு விடுதலை கைகூடும்” என்று அறிவுறுத்துகிறார்...

குடிப்பாங்கு

பிரிட்டனில் வெளியான ‘நியூ ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிகையின் செய்தியை சுதேசமித்திரன் வாசகர்களுக்கு தமிழில் பெயர்த்து வழங்கும் மகாகவி பாரதியின் மொழித்திறனும், இதழியல் கடமை உணர்வும், அவற்றை விஞ்சும் உலக அரசியல் நுண்ணுணர்வும் நம்மை வியக்கச் செய்கின்றன. இச்செய்தியை தமிழர்களுக்கு அளிக்க, நம்மவர்கள் அரசியல் அறிவு பெறுவது அவசியம் (அப்போதுதானே சுதந்திரப் போரில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்?) என்ற எண்ணமே காரணம் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டியாக வேண்டும்.

என்றன் நெஞ்சகம் ஏந்திழை பாலதே

‘சக்கரவர்த்தினி’ 1906 பிப்ரவரி மாத இதழில் வெளிவந்த  ‘துளஸிபாயி என்ற ராஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற கதையின் இரண்டாம் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது இப்பாடல்.

ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம்

பிரான்ஸ் நாட்டின் லட்சிய முழக்கம் - ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம். பிரெஞ்ச் இந்தியாவில் புகலிடம் தேடிச் சென்று, புதுவையிலிருந்து ‘இந்தியா’ பத்திரிகையை (10.19.1908 – 17.05.1910) நடத்திய மகாகவி பாரதியை, பிரான்ஸ் தேசத்தின் பிரதானக் குறிக்கோளான ‘ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம்’ ஆகியவை கவர்ந்ததில் வியப்பில்லை. இதுகுறித்து ‘இந்தியா’ பத்திரிகையின் மூன்று இதழ்களில் மகாகவி பாரதி எழுதிய கட்டுரைகள் இவை....

விளக்கு

‘சக்திதாஸன்’ என்ற பெயரில், சுதேசமித்திரன் இதழில் மகாகவி பாரதி எழுதிய கட்டுரை இது. கல்வி வளர்ச்சியே சமுதாயத்தின் வழிகாட்டும் விளக்கு என்று இக்கட்டுரையில் அறிவுறுத்துகிறார் பாரதி.

மகாகவியின் மறுபக்கம்

பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி, ‘தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இது....

மகாகவி பாரதியின் இறுதி நாட்கள்

பாரதி ஆய்வாளரான ரா.அ.பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து,  ‘சித்திர பாரதி’ என்ற நூலை வெளியிட்டார். 1957ல் முதலில் வெளியான இந்த நூலில், பாரதியாரின் கடைசி சில தினங்கள் எப்படியிருந்தன என்ற தகவல்களை மிக நுணுக்கமாகத் தொகுத்திருக்கிறார் அவர். அதிலிருந்து சில பகுதிகள்:

மக்கள் கவி பாரதி

தமிழக முன்னாள் முதல்வர் திரு. சி.என்.அண்ணாதுரை, பிற திராவிட அறிஞர்களைப் போல மகாகவி பாரதியை மூடி மறைக்க விரும்பாதவர். பாரதியை தேசியகவி என்று சொல்வதில் அவருக்கு சற்றே சங்கடம் இருந்தாலும், மக்களுக்கான கவிஞர் என்று அவரைக் கொண்டாடினார். இது திரு. அண்ணாதுரை அவர்களின் கட்டுரை.

வெய்ய இடி

இந்தியா 27.09.1909 இதழில் வெளியான ‘ஞானரதம்’ கதையில் இடம் பெறும் காதலைப் பற்றிய கவிதை இது.

பாரதியாரும் கோவில் யானையும்

பாரதியியல் ஆய்வாளரும், சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவருமான பேரா. திரு. ய.மணிகண்டன், ‘தினமணி’ நாளிதழில் எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. நன்றியுடன் மீள்பதிவாகிறது...