தமிழ் இலக்கியத்தில் செங்கோல் -7

உலகியல் இன்பங்களை விட உயர்ந்தது துறவு என்று கூறுவதற்காக திருத்தக்க தேவரால் இயற்றப்பட்ட காப்பியமான சீவக சிந்தாமணி, அக்கால மன்னரின் முறை வழுவா ஆட்சியின் சின்னமாக செங்கோலை முன்னிறுத்தும் செய்யுள்களைக் கொண்டு இலங்குகிறது....

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 6

பழந் தமிழ் இலக்கணமான தொல்காப்பியம்,  ‘படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகிய ஒன்பது பொருட்களும் வேந்தர்க்கு உரியவை’ என்று கூறுகிறது. இவை  அனைத்திற்கும் மேலானதாக செங்கோல் மன்னனின் அடையாளம் என்கிறது தொல்காப்பியம்....

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 5

இளமை நிலையாமை, யாக்கை (உடல்) நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் மூன்று கருத்துகளையும் மணிமேகலை காப்பியம் அழுத்தமாகக் கூறுகிறது. பௌத்த சமயத்தின் ஆணிவேரான துறவையும் தொண்டையும் போற்றிப் பரவுகிறது இக்காப்பியம். என்றபோதும் மன்னனின் செங்கோல் உயர்வை காப்பியம் ஆங்காங்கே முன்வைப்பது, செங்கோல் வீழின் துறவும் நிலையாது என்பதால் தான்.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 4

‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ ஆகிய மூன்று அறவுரைகளை முன்னிறுத்தி, கற்பின் கனலி கண்ணகியின் கதையைக் காப்பியமாக்கி இருக்கிறார் இளங்கோ அடிகள். இக்காப்பியத்தில் ஆங்காங்கே, செங்கோல் குறித்தும், நல்லாட்சி குறித்தும் இனிய செய்திகள் தொடர்ந்து பயின்று வருகின்றன. அவற்றை இங்கு காண்போம்…

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 3

நடையில் நின்றுயர் நாயகனான ராமன் புகழ் பாடும் கம்ப ராமாயணத்தில் செங்கோன்மை குறித்து இல்லாமல் இருக்குமா? ராமனின் நாடான கோசலமே ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணச் சான்றாக இருக்கிறது. ஒரு செம்மையான ஆட்சி நிலவும் நாடு எவ்வாறு இருக்கும் என்று இலக்கணம் வரைந்த கம்பர், செங்கோலின் சிறப்பையும் ஆங்காங்கே பாடல்களில் கூறிச் செல்கிறார். செங்கோல் ஓங்கிய ஆட்சியே ராமராஜ்ஜியம் என்று அழைக்கப்படுவதும், அதையே நமது தேசிய லட்சியமாக மகாத்மா காந்தி முன்வைத்ததும் இயல்பானவை அல்லவா?

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 2

‘செங்கோன்மை’ அதிகாரத்தில் மன்னரின் இலக்கணத்தை நேர்மறையாக கூறியவர், ‘கொடுங்கோன்மை’ அதிகாரத்தில் எதிர்மறையாகக் கூறுகிறார். இவ்வாறு நேர்மறை- எதிர்மறையாகக் கூறி ஒரு கருத்தை மிகவும் ஆழமாக விளக்குவது திருவள்ளுவருக்கு புதியதல்ல. இதோ, ஒரு கொடுங்கோலன் எவ்வாறு இருப்பான், அதற்கான காரணங்கள் என்ன என்று பத்து குறட்பாக்களில் கூறுகிறார் திருவள்ளுவர்...

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 1

இந்தியா சுதந்திரம் பெற்றபோது 1947 ஆகஸ்ட் 14-இல் திருவாவடுதுறை ஆதீனத்தால் நாட்டின் முதல் பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று (28.05.2023) தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்படுகிறது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. இதனையொட்டி, தமிழ் இலக்கியங்களில் காணப்படும் செங்கோல் குறித்த பதிவுகளைக் காண்போம்...

அன்புஜோதியின் அவலமான பின்னணி

“சைவ உணவு விடுதி” என்ற பெயர் தாங்கிய நிறுவனத்தில் புலால் சமைத்துப் பரிமாறப்படுமானால் எப்படி பெயர் பொருத்தம் இல்லையோ, அது போன்றே காப்பகத்தின் பெயருக்கும், அங்கே நடக்கும் சம்பவங்களுக்கும் சற்றும் பொருத்தம் இல்லாத நிலையில் கடந்த 17 ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் சின்னஞ்சிறு குக்கிராமத்தில் கொடுமைமிகு காப்பகம் இயங்கி வந்திருக்கிறது.....

மன்னுயிர்  எல்லாம் தொழும்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகம் அடைந்து வரும் சிரமங்களையும், உக்ரைன் மக்கள் அடைந்துள்ள வேதனைகளையும் சுட்டி, அதன் பின்புலத்தில் உள்ள சுயநல உலக அரசியலையும், எளிய தீர்வையும் முன்வைக்கிறார், எழுத்தாளர் திரு. டி.எஸ்.தியாகராஜன்....

அபூர்வ மனிதர்  தரம்பால்

பண்டைய இந்தியாவின் கல்வி, அறிவியல் வளர்ச்சி ஆகியவை குறித்து அற்புதமான ஆய்வுநூல்களை அளித்து உலகின் கவனத்தை ஈர்த்தவர் தரம்பால். அவரைப் பற்றி திரு. டி.எஸ்.தியாகராஜன் எழுதிய அறிமுகக் கட்டுரை இது....

பகவத் கீதை– பதினெட்டாம் அத்தியாயம்

ஓர் அற்புதமான ஞான இலக்கியம் போர்முனையில் உதித்ததை அஞ்ஞானிகள் உணர மாட்டார்கள். ஏனெனில், இது மனத்தின் இருநிலைகளுக்கு இடையிலான போர். அஞ்ஞானிகளின் ஆணவம் இதனை அறிய விடாது. பகவத் கீதையின் இறுதி அத்தியாயம் இது… வில்லேந்திய வீரன் விஜயன் மனக்குழப்பத்தில் ஆழ்ந்தபோது அவனை பலவாற்றானும் தேற்றி, பலவிதமான வாதங்களால் அவன் மயக்கத்தைப் போக்கி, போருக்கு ஆயத்தப்படுத்துகிறான், அவனது அன்புத் தோழன் கண்ணன். இறுதியாக, “எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன், துயரப்படாதே” என்று நம்பிக்கை அளிக்கிறான்...

பிரித்தலும் பேணிக் கொளலும்

உண்மையில், சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சியின் போது நாடார் சமூக மக்கள் நாடாழ்வான் என குறிப்பிடப்பட்டுள்ளனர். கரூர் பசுபதீஸ்வரர் கல்வெட்டில் “ஜெயமுரி நாடாழ்வான்” என்பவர் 1053-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்காவிற்கு படையுடன் சென்றது குறிப்பிடப்பட்டுள்ளது.

அசலும் போலியும்

ராணுவத்தினர் நலம் காக்க அரசு விழா எடுக்கும் கொடி நாளின் வசூல் எவ்வளவு தொகை? புகழ் பெற்ற நடிகர் ஒரு திரைப்படத்தில் நடிக்கக் கேட்கும் ஊதியத்தின் தொகைக்கு பக்கத்திலாவது நிற்குமா? ஆனால் நாட்டிற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் ராணுவ வீரர் தான் அசல். மற்றோர் கதாநாயகர்கள் வேடத்தில் தோன்றும் நபர்கள் போலிகள்.

பிச்சை புகினும் கற்கை நன்றே!

கல்வி குறித்தும், கற்பதன் அவசியம் குறித்தும் கல்வி நலன் இல்லையாயின் எவரும் உலகில் மதிப்புடன் வாழ இயலார் என்பதை அற்றை நாள் அரசர்கள் அறிஞர்கள் முதற்கொண்டு இற்றை நாள் மாந்தர்வரை பலப்பட சொல்லியுள்ளார்கள். “எக்குடிப் பிறப்பினும், யாவரே ஆயினும், அக்குடியில் கற்றோரே மேல் வருக” என்கிறது வெற்றி வேட்கை.

நாட்டுப்பற்றும் பாடத்திட்டமும்   

1947-க்குப் பிறகு கல்விச் சாலைகளின் பாடத்திட்டங்களில் பாரதத்தின் முன்னைய நாளின் வீர, தீர மன்னர்கள், தாய் மண்ணைக் காக்கப் போராடிய வீர புருஷர்கள், வந்தேறிய பகையாளர்களை உயிர் உள்ள வரை எதிர்த்து நின்ற வணங்கா முடியரசர்களை விஞ்ஞான, மெய்ஞான நுட்பங்களைக் கற்றறிந்த முன்னோர்களை அடையாளம் காட்டி இளைஞர்களை உருவாக்கத் தவறிவிட்டோம்....