ஸ்ரீநீவாசனுக்கு வைர கிரீடம் சூட்டிய ரங்கநாதன்

அரசியலில் தூய்மை, பொதுவாழ்வில் நேர்மை என்பது காண அரிதான தமிழகச் சூழ்நிலையில், ரங்கநாத முதலியாரின் நினைவு போற்றத்தக்கதாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது....

தமிழ்த்தாயைக் காத்த தனயன்

பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் தமிழை வளர்த்தார் என்பது தெரியும். கும்பகோணம் அருகே பிறந்த மற்றோர் அகத்தியர் தமிழைக் காத்தார் என்பது தெரியுமா?

சங்க காலம் (எதிர்) சாராய காலம்

சங்கத் தமிழ்க் கவிதைகளை தற்கால நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி சிந்தனையைத் தூண்டுவதில் எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன் சிறப்பிடம் வகிக்கிறார். தமிழறிஞர்கள் செய்ய வேண்டிய அரும்பணி இது...

மகாகவிகள் வாழ்த்திய தமிழ்ப் பேராசான்

இன்று நாம் காணும் தொன்மையான தமிழ் இலக்கியங்களில் பலவற்றை கரையானுக்கு இரையாகாகாமல் பனையேடுகளிலிருந்து நூலாக மாற்றிக் கொடுத்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். அவரது கடும் முயற்சியும் உழைப்பும் இல்லாதிருப்பின், பல பழந்தமிழ் இலகியங்களை நாம் அறிந்திருக்கவே இயலாது. அவரது சிறப்பை அறிந்து அந்நாளிலேயே மகாகவிகள் இருவர் வாழ்த்துக் கவிதை பாடி மகிழ்ந்துள்ளனர். அது பற்றி இங்கே காண்போம்…

பிரிவினை மனநிலைகள் : ஒரு தீர்வு

கோவையைச் சார்ந்த இளைஞர் திரு. ராதாகிருஷ்ணன், 'கொழும்பு முதல் அல்மோரா வரை' நூலைப் படித்ததன் பின்புலத்தில் இக்கட்டுரையை எழுதி இருக்கிறார். வேற்றுமைகளை ஒழிப்பது வேதாந்தம் என்கிறார்....

மாரீசன் குரல்

தமிழகத்தில் பிசாசு மாதிரி உருவெடுத்து வருகிறது பாஜக (உபயம்: அமைச்சர் துரை முருகன்) என்று திமுகவினரே நம்பத் தொடங்கிவிட்டார்கள் என்பது தெரிகிறது. பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் ஒவ்வொரு நாள் செய்தியாளர் சந்திப்பும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், அவரை முடக்க முனை மழுங்கிய பல ஆயுதங்களைப் பிரயோகித்துப் பார்க்கிறது ஆளும் திமுக. அதன் கடைசி முயற்சி, சமயச் சொற்பொழிவாளர் சுகி சிவத்தை அண்ணாமலைக்கு எதிராகப் பேச வைத்திருப்பது. இதற்குப் பொருத்தமான பதிலை அளிக்கிறது இக்கட்டுரை...

மகர சங்கராந்தியே  பொங்கல்!

தமிழர் திருநாள் என்ற பெயரில் இந்துக்களின் பண்டிகையான பொங்கல் திருவிழாவை மடைமாற்றும் முயற்சி, இந்த ஆண்டு மாநில அரசாலும், இந்து விரோதிகளாலும் முனைப்பாக முன்னெடுக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை மதச்சார்பற்றதாக மாற்ற பெரும் வேகத்துடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படன. இதற்கு ஆங்காங்கே அறிவுலகினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து மதத்தினரும் பொங்கல் விழா கொண்டாடுவதில் நமக்கு- தமிழ் பேசும் இந்துக்களுக்கு- எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், பாரம்பரிய வேர்களை வெட்டி வீழ்த்தும் வெறியுடன் இது ஒரு பின்புலத் திட்டத்துடன் இது மேற்கொள்ளப்படுகையில் விமர்சித்தாக வேண்டி இருக்கிறது. ... இங்கே உள்ளவை, மார்க்சிய அறிஞர் திரு. இளங்கோ பிச்சாண்டி, மருத்துவ சமூகவியலாளர் திரு. அ.போ.இருங்கோவேள் ஆகியோரின் பதிவுகள்...

சர்க்கரை இல்லாத பொங்கலா?

பச்சரிசியை மட்டும் பானையிலிட்டுக் கிண்டினால் பொங்கலாகி விடுமா? சர்க்கரை, பாசிப்பருப்பு, நெய், முந்திரி, திராட்சை, ஏலம் இல்லாமல் பொங்கலா? அப்படித்தான் தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக திராவிட மாடல் ஆட்சியை நடத்துபவரின் ஆதரவாளர்களும், அவரை ஆட்சியில் அமர்த்திய மாற்று மதத்தவர்களும் ஒரு பித்தலாட்டத்தை அரங்கேற்றி வருகிறார்கள். அதாவது தைப் பொங்கல் இந்துக்களின் பண்டிகை அல்லவாம்… தமிழர்களின் பண்டிகையாம்… அதற்காக பொங்கலின் வடிவத்தை மாற்ற - அதன்  ஆன்மிக உணர்வையே மழுங்கடிக்க - முயல்கிறார்கள் மடையர்கள். அவர்களுக்கான பதிலே இக் கட்டுரைகள்…

பொருள் புதிது – பொங்கல் மலர்- 2023

பொருள் புதிது பொங்கல் மலர்- 2023-இல் இடம் பெற்றுள்ள படைப்புகளின் பட்டியல்....

செங்கதிர்த்தேவன்!

விஸ்வாமித்திர முனிவரால் இயற்றப்பட்ட இந்த இருவரிக் கவிதை,  ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. வேதங்களில் மிகவும் பழமையான  ரிக் வேதத்தில், மூன்றாவது மண்டலத்தில் (3.62.10)  இடம்பெற்றுள்ளது. உலகின் இயக்கத்துக்கு ஆதாரமான சூரியனைப் பிரார்த்திப்பதே இம்மந்திரத்தின் அடிப்படை....

அவரது கனவுகளை நனவாக்க உழைப்போம்!

2012,  ஜூலை 4-ஆம் தேதி, சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தில், குஜராத் மாநில முதல்வராக தற்போதைய பிரதமர் திரு. நரேந்திர மோடி இருந்தபோது தனது இணையதளத்தில் எழுதிய  கட்டுரை இது...

காலம் பிறக்கட்டும்! (கவிதை)

கதிர்கள் தலையை அசைக்கக் காற்றில் கவிதை பரவட்டும்! கனவுகள் கண்முன் நனவாய்க் காணும் காலம் பிறக்கட்டும்!

ஞாயிறு போற்றுதும்:  மோதேரா சூரியன் கோயில்

சௌராஷ்டிராவை (குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதி) ஆண்ட (சாளுக்கிய) சோலங்கி வம்ச மன்னர் முதலாம் பீமதேவனால் மோதேரா நகரத்தில், பொ.யு. 1026 இல் கட்டி முடிக்கப்பட்டு, சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.... 7 குதிரைகள் இழுத்துச்செல்லும் தேரின் மீது தனது மனைவியர் சஞ்சனா, சாயா சூழ நின்று காட்சியளிக்கும்  சூரிய தேவன் சிற்பங்களின் எழிலில் நம் மனம் லயித்து விடுகிறது.

ஆன்மிகமும் தேசியமும்

இந்தியாவின் அடையாளம் ஆன்மிகமே என்பார் சுவாமி விவேகானந்தர். அவரது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றி எழுதும் மகரிஷி அரவிந்தர், இந்திய ஆன்மிகத்தின் புதிய ஒளியாக ராமகிருஷ்ணரை வர்ணிக்கிறார். அவரது அற்புதமான கட்டுரை, இங்கே இனிய தமிழில்…

பார் போற்றும் பரிதிக் கடவுள்

தமிழர் திருநாள் என்று சிறப்பித்துப் போற்றப்படும் தைப் பொங்கல் விழா, அடிப்படையில் ஒரு தேசியத் திருநாள் ஆகும். மகர மாதம் என்று அழைக்கப்படும் இந்தத் தை மாதத்தின் முதல் நாளன்றுதான், சூரியனின் ஒளி மிகுந்த வடதிசைப் பயணமான உத்தராயண புண்யகாலம் தொடங்குகிறது. ஆகையால் தைப் பொங்கல், மகர சங்கராந்தி என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாகவும் திகழ்கிறது. நமது ஹிந்து தர்மத்தின்படி, பண்பாட்டின்படி ஞாயிறு பிரத்யட்சக் கடவுளாக -  அதாவது கண்ணால் காணப்படும் கடவுளாகத் திகழ்கிறார். “ஞாயிறு போற்றுதும்” என்று சிலப்பதிகாரத்தில் போற்றப்பட்டுள்ள அந்த சூரியக் கடவுள், காயத்ரி ஜபத்தின் மூலம் துதிக்கப்படும் அந்தக் கதிரவத் தெய்வம், எவ்விதம் உலகமெல்லாம் வணங்கப்படும் தெய்வமாக விளங்குகிறார் என்பதை, தைப் பொங்கல் திருநாளை ஒட்டி விளக்கும் விதமாக,  மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் இந்தக் கட்டுரையை வழங்கி உள்ளார்.