-மகாகவி பாரதி
இந்தியா (25.5.1907) சித்திர விளக்கம்

சித்திரம்
தூத்துக்குடி ஸ்வதேசீய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியர் ஸ்டீமர்கள் கொண்டு வந்திருக்கும் மங்களகரமான செய்தியைக் கருதி நாம் “சுதேசீயக் கப்பல்கள்’’ என்ற சித்திரம் பதிப்பித்திருக்கின்றோம்.
தூத்துக்குடியாரின் அரிய முயற்சிக்கும் நம் நாட்டிலுள்ளோர் அனைவரும் பொருளாலும் வாக்காலும் வேறு வகையாலும் துணைபுரியக் கடமைப்பட்டிருக்கிறார்க ளென்பதை இங்கே வலியுறுத்துகின்றோம்.
இந்தியா (25.5.1907), பக்: 2
$$$
இந்தியா (15.6.1907) சித்திர விளக்கம்

இங்கிலாந்திலே கன்ஸர்வேடிவ் கட்சியார் ராஜ்ய நிர்வாகத்தை இழந்து லிபரல் கட்சியார் வரும் தருணத்தி லிருந்தபோது நமது நாட்டு ஜனத் தலைவர்களிலே பலர் இனி நமக்கு ஷேமகாலம் பிறந்துவிடுமென்று நம்பியிருந்தார்கள்.
இப்போது லிபரல் கட்சியார் ராஜ்ய அதிகாரத்துத்துக்கு வந்து முன்னிருந்தவர்களை நல்லவர்களாக்கி விட்டார்கள். கன்ஸர்வேடிவ் கட்சியார் அதிகாரத்திலிருந்தபோது பொதுச்சபைகளைத் தடுத்தல் முதலிய அநீதிகள் கிடையாது. இதையே சித்திரத்தில் விளக்கி யிருக்கிறோம்.
கன்ஸர்வேடிவெ பாட்டி ‘இந்தியா’ என்ற குழந்தைக்குப் பச்சைப்பால் கொடுக்க வருவதைத் தள்ளிவிட்டு, லிபரல் பாட்டி பழுக்கக் காய்ச்சிய பால் கொடுக்க வருகிறாள்.
இந்தியா (15.6.1907), பக்: 2
$$$